Wednesday, 14 March 2018

ஆதாம் எங்கேயோ
ஆறடிக்குள் புதைந்து விட்டான்
ஆனால் அவன் விட்டுச் சென்ற காதலோ
என்னோடும் உன்னோடும்
பூத்துக் கிடக்கிறது!!!

Friday, 10 June 2016

மாமன் மகள்


நீ என் மாமன் மகள். என்னை விட நீ நான்கு வயது பெரியவள். நீ எப்போதுமே என்னிடம் மிகவும் பாசமாய் இருப்பாய். எல்லா நேரங்களிலும் நீ என் வீட்டில் தான் இருப்பாய் என்னோடு தான் விளையாடுவாய்.
நீ பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாய் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் உன் வகுப்புத்தோழிகள் சேர்ந்து பள்ளியிலிருந்து பாதியிலே அழைத்துப்போனார்கள்,
நீயும் உன் தாவனியால் முகத்தை மூடிக்கொண்டு போனாய்.

நானோ பயந்து போய் ஓடிவந்து என்ன ஆச்சு என்று கேட்டேன் உன் தோழிகளோ அவள் யாரையும் பார்க்ககூடாது வயதுக்கு வந்திருக்கிறாள் என்றார்கள் நீயோ லேசாய் உன் தாவனியை விலக்கி ஒற்றைப்பார்வையால் என்னை பார்த்து சிறித்தாய்.

என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்தேன்.
தினமும் பள்ளிக்கு செல்லும் போது நீ தான் எனக்கு தலை வாரி விடுவாய் நீ என் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து ஏண்டி முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு முதலில் பிறந்தாய் ஒரு நான்கு வருடம் கழித்து பிறந்திருந்தால் அவனையே கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்ல என் என் அம்மா உன்னிடம் சொன்னாள்,
அப்போது உன் கன்னிலிருந்து சில துளி கண்ணீர்த்துளிகள் என் மீது விழுந்தது அதன் அர்த்தத்தை அந்த நேரத்தில் என்னால் உனர்ந்து கொள்ள போதிய வயதும் விவரமும் எனக்கு இல்லை.

இப்போது இன்னும் வளர்ந்திருந்தும் என் மீதான உன அன்பும் நேசமும் அன்பும் அதிகமானதே தவிர குறைய வில்லை. எனக்கென தேடித்தேடி உடைகள் வாங்கித்தருவாய் .
உன்மையாய் சொல்ல வேண்டுமானால் ஒரு தாய் செய்ய வேண்டியதையெல்லாம் நீ தான் செய்வாய்.

நான் தினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் நீ பட்டப்படிப்பு முடித்திருந்தாய் உனக்கு திருமனம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்று சேர்ந்து உன் திருமன விழாவை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

நீயோ கடைசியாய் என்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென அழைத்தாய் நானும் வந்தேன், ஏண்டா நீ என்னை விட சின்னவனாய் பிறந்தாய் என என் தலைகோதி அழுதாய்.

இந்த வாழ்க்கையை நான் உன்னோடு மட்டும் தான் வாழ்ந்திருக்க வேண்டுமென சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாய். அதன் அர்த்தத்தை அபோது தான் என்னால் உனர முடிந்தது.

நான் முதன் முதலில் எனக்கும் உனக்குமுண்டான பிரிவை அப்போது தான் உனர்ந்தேன் நாளை முதல் நீ என்னோடு இருக்க மாட்டாய். என்னை விட்டு பிரியப்போகிறாய் என் அழுகையை நான் எப்படி உனர்த்துவதென தெறியாமல் தவித்தேன் நீயோ அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னை விட சின்னவளாய் பிறந்து காலம் முழுக்க உன்னோடு வாழ வெண்டுமென சொல்லி ஓடி மறைந்தாய்.

உன் திருமனமும் நடந்து முடிந்தது இதோ காலங்கள் கடந்து விட்டது. உனக்கு அன்புக்கு ஒரு மகனும் ஆசைக்கு ஒரு மகளும். ஆனால் என்னால் மட்டும் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனம் விரும்ப வில்லை.


யார் யாரோ சொல்லியும் என்னால் மனம் மாற முடியவில்லை. நீயும் பலமுறை வற்புறுத்தியும் என்னால் வேறு திருமனம் செய்ய தோன்ற வில்லை. நீ அள்ளித்தந்த அன்பை வேறு ஒருவளிடமிருந்து பெற மனம் வர வில்லை. நீ முத்தமிட்ட இடத்தில் வேறு ஒருவளை முத்தமிட அனுமதிக்க முடியவில்லை.

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க வேண்டுமென அவசியமல்ல ஆம் சிலர் ஆசைப்பட்டவர்களோடு வாழ்கிறார்கள். பலர் வெறும் ஆசைகளோடு மட்டும் வாழ்கிறார்கள். நானும் உன் அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து விட்டுப்போகிறேன்.

மாறாத நேசத்தோடு

கீழ்.கா.அன்புச்செல்வன்.

Tuesday, 7 June 2016

தேவதையானவள்..



என் பொழுதுகள்
இருளை நோக்கி நடக்க ஆரம்பித்த
ஒரு அந்திம பொழுதில்
என் செவிகளை கூர்மையாக்கின
உன் குரல்!

சிலகணங்களில்
துண்டிக்கப்பட்ட குரலின் இனிமை
என்னைவிட்டு அகலாமல் அடம்பிடித்து
கொண்டிருக்கையில்

வெளிச்சங்களற்ற இரவில்
குறுந்தகவலில் அன்பை எனக்கு
அனுப்பிவிட்டிருந்தாய்!

செவியிலிருந்து
சிந்தை வரை அந்தகுறுந்தகவல்
உன் குரலானால் இன்னும் எத்தனை
அழகாயிருக்கும் என்று சிந்திக்கையில்

அந்த
அழகிய குரலுக்கான உருவம்
தேடி அலைந்துகொண்டிருக்கிறது
என் நினைவுகள்
ஒரு வனாந்திரத்தில்!

முகமறைத்த
அழகியலோடு இறகுகளற்ற
உருவம் குறுக்கீடுசெய்கையில்

அங்கேயே
நின்றுகொண்டு இதோ உனக்கான
தேவதை யென்றது
என் கவிதை!

கீழ்.கா.அன்புச்செல்வன்

காதல் செய்வோம் வா ...


உன் முதல்
பார்வையின்
குளிர்ச்சியில் தான்
எனக்கு
காதல் காய்ச்சலே
வந்தது ...

நேற்று
நீ என்மனதில்
மழையாய் பெய்ததில்
இன்று
முழைத்து நிற்கிறேன்
உன் வீட்டு
தோட்டத்தில்
காதல்
பயிராய் ...

என்
இதயத்தில்
எங்கோ அமர்ந்துக்கொண்டு
என் கனவுகளை
திருடிக்கொண்டுருக்கிறாய் ...

அம்மாவோடு வரும்போது
அழகு ...
அப்பாவோடு வரும்போது
அமைதி ...
அண்ணனோடு வரும்போது
ஆரவாரம் ...
ஆனால்
என்னைப்பார்க்கும்போது மட்டும்
மௌனம் ...

நம் காதல்
சதுரங்கத்தில்
என்
குதிரைகள் எல்லாம்
எப்போதே
பின்வாங்கிவிட்டன ...

நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன் ...
நாகரிகமாய்
நம்மில்
காதல் நடனமாடியது ....

தொடுவதை
ஒருபோது  நீ
விடுவதே கிடையாது ...
மீறி நான்
தொட்டுவிட்டால்
உன் பார்வையால்
சுட்டு விடுவாய் ....

பஸ்
இருக்கையில் கூட
தள்ளி தானே
இருக்க சொல்வாய் ...

மழை நேரத்தில்
ஒரு குடையில்
இருவர்
வருவோம் ...

என் ஓரம்
நனையும் என்று
நீ ஓரத்திற்கு போவாய் ...
உன் ஓரம்
நனையக்கூடதென்று
நான் ஓரமாக
வருவேன் ...
நனைந்ததென்னமோ
 நம்ம காதலும்
நம் குடையும் தான் ...

இப்படி நம்
காதல்
எப்போதுமே
நாகரீகமனதுதானே ...

நாம் எப்போதும்
நிழற்தேடும்
அந்த அழமரத்திற்கு
இன்றோடு
வயது நாற்பதாம் ...

என்ன நமது
காதலின்
வயது அதில்
பாதி இருக்காது ...

போதும்   நமக்கும்
 நமது
காதலுக்கும்
வயதாகிக்கொண்டே போகிறது ...
வாலிபம்
முடிவதற்குள்
கொஞ்சம்
காதல் செய்வோம் வா...

கீழ்.கா.அன்புச்செல்வன்
 

காதல் செய்வோம் வா!



கையுடன் கைக்கோர்த்து
என்னை அழைத்து சென்று
சொல்லிவிடு...
என்னவெல்லாம்
பேச நினைத்தாயோ
அவை அத்தனையும்!
என் காதோர‌ம் நெருங்கி வா
மெண்மையாக‌ சொல்லிவிடு...
நான் கேட்க‌ விரும்பும்
அனைத்தையும்!

என்னை தொடு
என் இத‌ழ்க‌ளை சுவைத்திடு
என்னுள் ஆழ‌மாக இருக்கும்
உண‌ர்வுக‌ளை வெளியேற்றிடு!
காற்றுக்கூட‌ புகுந்திட‌ முடியாள‌வில்
இருவ‌ருக்கும் நெருக்க‌த்தை ஏற்ப‌டுத்து....
என்னை உன் வசப்படுத்தி அனைத்து
என் ப‌ய‌த்தினையும்
வ‌லியினையும் எடுத்துக்கொள்!

அந்நொடிகளில்
தோன்றி மறையும்
என் வெட்கங்க‌ளில்
உயிர்த்திடு!
என்னுடைய‌ இர‌வுக‌ளில்
 ப‌க்க‌மிருந்து
வெளிச்ச‌ம் கொடு!
என் பக‌ல்க‌ளில்
நீ ஒருவ‌ன் ம‌ட்டுமே
என‌க்காக‌ என்ப‌தை காட்டிடு!
 தடைகளை தகர்த்து
என் இதயத்தில் நுழைந்திடு!
நீ என்னுள் இருக்கும்
தருணத்தை பார்க்கும் நேரமிது!

உன்னுள் சிறைப்பட்டிருக்கும்
என்னை இன்னும் தெரியவில்லையா...
என் விலங்குகளை உடைத்து
விடுதலை தந்துவிடு!
மனதின் ஆழத்தில் இருக்கும்
என்னை வெளிக்கொண்டு வந்திடு
இப்பொழுது நான் தயாராக இருக்கிறேன்
காதல் செய்வோம் வா!
கண்ணே வா காதல் செய்வோம்! 


நமது கூடலின் 
உஷ்ண மூச்சில் 
சீர் கெட்ட சாதிகள்
சிதைந்து போகட்டும். 

அணைப்பின் 
இறுக்கத்தில் வழியம் 
வியர்வைகலெல்லாம் 
அமிலமாகி 
அகமண முறையெனும் 
அரக்கனை 
வென்று வீழ்த்தட்டும். 

எண்ணில்லா பிள்ளைகள்
பிறந்து தவழட்டும் 
வரும் காலம் 
நிகழ்காலத்தோடு 
யுத்தம் தொடங்கட்டும். 

நின் குழல் சரிவிலும் 
கோல விழியிலும் 
என் குலப்பெருமை 
பட்டுஒழியட்டும். 

கண்ணே வா 
காதல் செய்வோம்! 

உனது வதன வெளிச்சம் 
வருணங்களின் 
குரூர விழிகளைக் 
குருடாக்கட்டும். 

தீண்டும் 
ஒவ்வொரு முத்தமும் 
உயர்வு தாழ்வு என்னும் 
வலிய சுவர்தனில் 
இடிகளாய் இறங்கட்டும் .

கண்ணே வா 
காதல் செய்வோம்! 

சாதியால் 
சமாதியாக்கப்பட்ட 
அனேக காதலர்களின் 
மனசாட்சியாய்.....

கண்ணே வா 
காதல்செய்வோம் !

கீழ்.கா.அன்புச்செல்வன்