Tuesday, 7 June 2016

காதல் செய்வோம் வா ...


உன் முதல்
பார்வையின்
குளிர்ச்சியில் தான்
எனக்கு
காதல் காய்ச்சலே
வந்தது ...

நேற்று
நீ என்மனதில்
மழையாய் பெய்ததில்
இன்று
முழைத்து நிற்கிறேன்
உன் வீட்டு
தோட்டத்தில்
காதல்
பயிராய் ...

என்
இதயத்தில்
எங்கோ அமர்ந்துக்கொண்டு
என் கனவுகளை
திருடிக்கொண்டுருக்கிறாய் ...

அம்மாவோடு வரும்போது
அழகு ...
அப்பாவோடு வரும்போது
அமைதி ...
அண்ணனோடு வரும்போது
ஆரவாரம் ...
ஆனால்
என்னைப்பார்க்கும்போது மட்டும்
மௌனம் ...

நம் காதல்
சதுரங்கத்தில்
என்
குதிரைகள் எல்லாம்
எப்போதே
பின்வாங்கிவிட்டன ...

நீ சிரித்தாய்
நானும் சிரித்தேன் ...
நாகரிகமாய்
நம்மில்
காதல் நடனமாடியது ....

தொடுவதை
ஒருபோது  நீ
விடுவதே கிடையாது ...
மீறி நான்
தொட்டுவிட்டால்
உன் பார்வையால்
சுட்டு விடுவாய் ....

பஸ்
இருக்கையில் கூட
தள்ளி தானே
இருக்க சொல்வாய் ...

மழை நேரத்தில்
ஒரு குடையில்
இருவர்
வருவோம் ...

என் ஓரம்
நனையும் என்று
நீ ஓரத்திற்கு போவாய் ...
உன் ஓரம்
நனையக்கூடதென்று
நான் ஓரமாக
வருவேன் ...
நனைந்ததென்னமோ
 நம்ம காதலும்
நம் குடையும் தான் ...

இப்படி நம்
காதல்
எப்போதுமே
நாகரீகமனதுதானே ...

நாம் எப்போதும்
நிழற்தேடும்
அந்த அழமரத்திற்கு
இன்றோடு
வயது நாற்பதாம் ...

என்ன நமது
காதலின்
வயது அதில்
பாதி இருக்காது ...

போதும்   நமக்கும்
 நமது
காதலுக்கும்
வயதாகிக்கொண்டே போகிறது ...
வாலிபம்
முடிவதற்குள்
கொஞ்சம்
காதல் செய்வோம் வா...

கீழ்.கா.அன்புச்செல்வன்

No comments:

Post a Comment