Tuesday, 7 June 2016

உனக்கான என் பிறந்த நாள் பரிசு...

உன்னை பார்த்த முதல் நாள்
பசுமரத்தாணியாக உள்ளது என் மனதில்...
கண்டவுடன் காதல் இல்லை, என்றாலும்
ஏதோ ஒரு சலனம் என்பது உண்மைதான்...

உன்னுடன் பழகிய பல நாட்களில் வந்து வந்து
போகும் நீ என்னவன் தான் என்று..
மேகம் மறைக்கும் முழுநிலவு போல
என்னையே ஏமாற்றி என் மனதை
மறைக்க முற்பட்ட நாட்கள் பல...

வளைக்க வளைக்க வீறுக் கொண்டெழும்
மூங்கிலைப் போல விஸ்வரூபமாய்
வளர்ந்துக் கொண்டே போனது
என் காதல் என் செய்ய?
குரங்காய் மனம் மாறி
மறைக்கவோ, ஒதுக்கவோ முற்படாலும்,
விடவில்லை - உன் மீதான
என் பொல்லாக் காதல்...
சட்டென்று வெளிவந்தது என் காதல்
பல புற்றீசலாய்
உயிர் வாழாது என தெரிந்தும்
வெளி உலகத்தை காணும் ஆவலை போல
நீ கேட்டாய், அதிர்ந்தாய், மனம் வருந்தினாய்
என்னவனே !

செய்து முடிக்க வேண்டிய கடமைகளால்
நீ கட்டுண்டு இருக்கிறாய் என அறிவேன்
எனவே நீ பேசினாய், வினவினாய்,
கலங்கினாய், விளக்கினாய்,
அரட்டினாய், வேண்டாமென மன்றாடினாய்
அத்தனையும் மெத்தன காதல்
பார்வையில் தானே பார்த்துக் ரசித்துக்
கொண்டிருந்தது என் கல் மனது?
ஆம் அநாதையாய் கிடந்த
எனக்கு அன்பை அளித்தவள் நீ.
ஆருதலாய் இருந்தவள்.

எத்தனையோ மாற்றங்கள்
வாழ்வில் நடந்தாலும்
உன் மீதான நேசம் – எப்போதுமே
என்னை விட்டு மாறாது.

நான் கொன்ட நேசம்
எப்போதுமே என்னை அநாதையாக்கியதில்லை.
எத்தனை வசதிகள், வாய்ப்புகள்
வந்தாலும் – என் மனம்
உன்னோடு இருந்த நாட்களுக்காகவே
ஏங்கித்தவிக்கும்.

எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
எத்தனை பிறவிகள் போனாலும்
மனம் முழுக்க
உன் ஒருவலுக்காக மட்டுமே
மனம் துடிக்கும்.

என் அன்பானவளின் பிறந்த நாள்
என் இல்லத்தின் நிகழ்வு – ஆனால்
அவளில்லாத இல்லம்
எதுவுமெ இல்லாததாய் காட்சி படுகிறது.

என் மனதில் உள்ளதை
வடிப்பதை தவிர என்ன கொடுக்க முடியும் என்னால்
தொலைவில் நாடு விட்டு நாடு இருக்க ? .
ஒருவேளை
இதை படிக்கும் போது
உனக்கு ஏதேனும் என் மீது அன்பு ஏற்பட்டால்
இதுவே
உனக்கான என் பிறந்த நாள் பரிசு .......

மாறாத அதே அன்புடன்

கீழ்.கா.அன்புச்செல்வன்...











No comments:

Post a Comment