Thursday, 12 March 2015

மார்ச் 8 உலக பெண்கள் தினம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று.
பெண் நாட்டின் கண் என்பார்கள் ஆனால்
அப்பெண்ணின் மீது தான் பலர் கண்...
அழகின் வடிவமாய் பெண்ணைப்
படைத்தது இயற்கையின் குற்றமோ?
அல்லது அதே உலகில்
வக்கிர குனம் கொண்ட கயவர்களையும்
படைத்ததும் குற்றமோ?
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று.
பெண் சிசுக்கொலை குறைந்ததென்று
பெருமூச்சு விடும் வேளையிலே
பெண் காமக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே
போகிறதே இந்த கேவலமான் நாட்டில்!
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
பெண்களின் கற்பை வேட்டையாடும்
மிருகங்கள் நாட்டில் சுகபோகமாய்
சுற்றித் திரியும் பெருங்கொடுமை
இந்தியாவை தவிர்த்து
வேறெங்கிலும் உண்டா?
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
என்ன வென்று அறியாத
இளம்பிஞ்சுகளை தன் இச்சை தீர்க்க
பலி கொள்ளும் அரக்கர்கள்
நம் நாட்டை தவிர்த்து
வேரெங்கிலும் உண்டா?
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
காதலை ஏற்காத
கண்ணியரின் மீது அமிலத்தை
உற்றுவது வேரெங்கிலும் உண்டா?
சிதைவது அவள் முகம் மட்டுமல்ல - அவள்
கனவுகளும் தான் என்பதை உனராத
சமூகத்தை நினைத்து
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
நம் தாய், சகோதரியின் பற்றுகொள்ளும் நாம்
பிறர் தாய், சகோதரியை இச்சையாய்
நினைப்பது முறையாகுமா ?
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
ஓடும் பேருந்தில்
ஒருவள் கற்பு சூறையாடியதையும்,
கற்பழித்தவன் கம்பீரமாய்
பேட்டியளிப்பதையும்
வேடிக்கை பார்க்கும் இந்த அரசை
என்னி வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
தன் வீட்டு பெண்கள்
சாதி மாறி காதலித்ததால்
கவுரவ கொலை செய்யப்படுவதை
தொழிலாய் செய்யும் மிருக தந்தைகளையும்
வெறிப்பிடித்த சகோதரன்களையும் என்னி
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
என்று மாறும் இந்த சதைப் பித்தும்,
காதலின் பேரிலே பெண்ணைத் துரத்தும்
மோகப் பித்தும் ? எந்நூற்றாண்டில் தான்
பெண் கொடுமை நீங்கும் நாள் வரும் ?
ஒவ்வொரு ஆண்டு மார்ச் 8ம்
எனக்கு நினைவு படுத்துகிறது - ஆணாதிக்கத்தின்
அத்துமீறல்களையும், ஆண்கள் எனும்
திமிரையும்...
ஒவ்வொரு ஆண்டு மார்ச் 8ம்
எனக்கு நினைவு படுத்துகிறது - பொய்யான
பெண் சுதந்திரத்தையும், போலியான
ஆணாதிக்க அரசாங்கத்தையும்.
ஆம்
வெட்கப்படுகிறேன் நான் ஒரு
ஆண் மகன் என்று!
கீழ்.கா.அன்புச்செல்வன்

No comments:

Post a Comment