Thursday, 12 March 2015

அவளின் திருமணம்
அமைதியாய் ஒரு ஒரத்தில்
நடப்பதை நாடகம் போல்
அமர்ந்து பார்க்கிறேன்!!!
அழுகை கடலென
பொங்குகிறது.
மௌனங்கள்
என்னை குத்தி கொலை செய்கிறது!!!!
என் விரல் பிடித்து
அவள் உலகை ரசிக்க - அதைப்
பார்க்க வேண்டிய கண்கள் - யாரோ
ஒருவனின் விரல் பிடித்து
நடக்கும் நிகழ்வு.
இன்னும் ஏன் என் உயிர்
பிரியவில்லை என்று
என் உடல்
என்னிடம் கேட்கிறது !!!!!
கண்ணீர் பொங்கினாலும்
சுகமாய் சிரிக்கச் சொல்லி தந்தது
யார் என்று நான் சொல்லுவேன்!!!
இருந்தும்
இப்போது யோசிக்கிறேன்
என் மேல் எனன தவறு என்று!!!

No comments:

Post a Comment