Thursday, 12 March 2015

மனைவி
________
என் பிரியமான பிரியம் !
என்னுள் பிரிவில்லாத இதயம் !
என் அனைத்துமான
அன்பு ஆத்மா!......
உயிரென்றாலும் பிரிவு உண்டு ,
உணர்வென்றாலும் மாற்றமுண்டு ,
உலகென்றாலும் அழிவுண்டு ,
அதனால் ஆத்மா என்றேன் ....
அத்தனையும் இழந்தாலும்
அரவணைப்பவள் அவள் ...
என்னை என்னவென்று
எனக்குள் உணர்த்தியவள் அவள்....
என் ஒட்டுமொத்த உணர்வுகளின்
ஒற்றை பாதுகாவளி அவள்...
என் இமைவரம்புகளில்
நீர்த்துளிகள்
எட்டிப் பார்க்கும் முன்பே
தொட்டுத் துடைத்தவள் அவள்....
தன்னை மறந்து
என்னையே நினைந்து
என் நேசிப்பை சுவாசிக்கும்
என் கவியான உயிரவள்.....
"மனைவி மனதின் துணைவி"
என்றென்றும்.

No comments:

Post a Comment