Wednesday, 10 December 2014



என் திசை முழுதும் காதல்!! காதல்!!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
படிக்க வழியின்றி
கிடந்த என்னை 
பொறியாளனாக்கியது காதல்.
அன்புக்கு
ஏங்கிக்டந்த - எனக்கு
என்னற்ற அன்பை
அள்ளிப்பொழிந்தது காதல்.
பேற்றவர்களாலும்
மற்றவர்களாலும்
புறக்கனிக்கப்பட்ட - என்னை
அன்போடு தன்னுடையை
மடியில் தூங்க
வைத்தது காதல்.
நான் தடுமாறி
விழுந்த போது - என்னை
தாங்கிப்பிடித்தது
காதல்.
நான்
வேதனையில்
தவித்து போது
தன்னுடைய
தோளில் சாய்த்துக்கொண்டது
காதல்.
பட்டிக்காட்டில்
கிடந்த என்னை - இன்று
சென்னை பட்டனத்தில்
குலு குலு அறையில்
ஒரு மேலாளராய்
அமர்த்தியது காதல்.
இன்று
நான் வாழும் - வாக்கைக்கு
அடித்தளம் காதல்.
அந்த காதல்- இன்று
என்னோடு இல்லாமல்
இருக்கலாம் - ஆனால்
இந்த வாழ்க்கையை
நான் வாழும் ஒவ்வொரு - வினாடியிலும்
அந்த காதல்
என்னோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது…
அன்னையர் தினத்துக்காக அம்மாவுக்கு எழுதியது.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பத்து மாசம் பத்தியத்தில்
பக்குவமா பெத்தவளே!
தாயாய் பேறு பற
தவமேற்க்கொண்டவளே.
எத்தனை வளிகளை
என் முகம்கான பட்டிருப்ப.
வேண்டாத சாமியெல்லாம்
வேண்டி என்ன பெத்திருப்ப.
என்ன வரம் கேட்டாயோ
என்னை நீ பெற்றெடுக்க.
என்ன தவம் செஞ்சோனோ
உன் வயிற்றில் நான் பொறக்க.
தூசி துறும்பு அண்டாம
தொப்புள் கொடி அறுத்திருப்ப.
கண் மூடி நானுறங்க – நீ
கண் முழிச்சி படுத்திருப்ப.
எத்தனையோ துன்பப்பட்டு
என்னை நீ வளத்திருப்ப – அடி மாடா
நீ உழைச்சி என்னயத்தான் படிக்க வச்ச.
கம்மங்கூழ நீ குடிச்சி
எனக்கு அரிசி சோறு கொடுத்திருக்க.
ஆராரோ கதை சொல்ல
என்ன நீ தூங்க வச்ச.
போட்டியில நான் ஜெயிச்சா
என் மகன் கலக்டருனு
ஊரில் சொல்வ. தாலியெல்லாம்
அடகு வச்ச நான் படிச்சி மேல வர.
எத்தனையோ துன்பங்கள
எனக்காக தாங்கிக்கிட்ட.
எத்தனையோ வேதனைய
எனக்காக மறச்சிக்கிட்ட.
ஊர் சண்டை
இழுத்து வந்தாலும் எம் பிள்ளை
உத்தமனு சொல்லுவியே.
பட்டப்படிப்பு நான் படிக்க
பட்டனம் தான் அனுப்பி வச்ச.
இந்த பாவி மகன் செலவுக்கு
மாசம் மாசம் பனம் தந்த.
காதல் வந்து
என்ன தீண்ட கவிதையும் எழுதினேனே.
உன்னப்பத்தி நான் எழுத
எப்படியோ மறந்தேனோ.
காதலிக்கு கவிதையெழுத
தூங்காம முழிச்சிறுக்கேன்.
ஒத்த வரி வார்த்தைக்கு
இரவெல்லாம் காத்திருப்பேன்.
எத்தனையோ வார்த்தைகள்
உன்னப்பத்தி இருந்தாலும் –
ஒத்த வார்த்த
உன்னை பத்தி இந்த பாவி மகன்
எழுதாம போனேனே.
உனக்கு படிக்க தெறியாதுனு
எழுதாம போனேனோ, இல்ல
எழுதியென்ன லாபமென்னு எழுதாம போனேனோ.
உன்ன சாமி போல பாத்துக்கத்தான்
வேலைக்கு நான் போனேன்.
காலத்துல கல்யானம்னு
எனக்கும் தான் பன்னி வச்ச.
மூனு பிள்ளை பெத்தாலும்
உன் பாசம் குறையலயே.
எனக்கொருத்தி - வந்த பின்பு
என் பாசம் கொறஞ்சிடிச்சே.
நான் வாங்கும் சம்பளத்தில்
உன் முகம் தான் தெறியுதும்மா.
குளிர் காற்றில் தூங்கினாலும் – உன்
வியர்வை வாசம் தான் வீசுதம்மா.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
உன் கடன் தீராதம்மா.
எத்தனை பேர் வந்தாலும்
உன் பாசம் கிடைக்காதும்மா.
கோவில் குளம் போக
எனக்கு ஒரு போதும் பிடிக்கலம்மா.
உன் கால் பட்ட இடத்த மட்டும்
தொட்டு கும்பிட ஆசையம்மா.
அடுத்த ஜென்மம்
உனக்கிருந்த என் மகளா பிறக்கனும்மா.
நீ கொடுத்த பாசமெல்லாம்
திருப்பி உனக்கு நான் தரனும்மா.

உன் அன்பு மகன்
கீழ்.கா.அன்புச்செல்வன்


அந்த நாட்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""
அந்த நாள்
என் வாழ்க்கையின்
மறக்க முடியாத நாட்கள்.
பக்கத்து வீட்டு
நன்பர்கள் எல்லாம்
காண்வென்டுக்கு போக - நான்
மட்டும்
அரசுத்தொடக்கப்பள்ளிக்கு
போன நாட்கள
அரசுப்பள்ளியிலும்
பல நன்பர்கள் - தோல்ப்பையை
எடுத்துச்செல்ல
நானும் சில நன்பர்களும்
துனிக்கடையில் தரும் - மஞ்சள் கலர்
பையை தூக்கிச்சென்ற நாட்கள்.
பள்ளிக்கு
எல்லோறும் சைக்கிளில்
செல்லும் போது - நானும்
சிலரும் மட்டும்
நடந்து போகும் போது - சைக்களில்
செல்வபவர்களை
ஏக்கமாய் பார்த்த அந்த நாட்கள்.
பட்டன் அறுந்த
கால்ச்சட்டையை முடிச்சுப்போட்டும்,
பட்டன் அறுந்த சட்டையை
தேங்காய் நாரினாலும்
கட்டிச்சென்ற
கொடுமையான நாட்கள்.
கோடை விடுமுறைக்கு
மாமா வீட்டிற்கு செல்ல - சட்டையில்லாமல்
நன்பனின் சட்டையை
கடன் வாங்கி போட்டுச்சென்ற
அந்த நாட்கள்.
8-ம் வகுப்பு படிக்கும் போது
12-ம் வகுப்பு அண்ணன்கள் - கொடுக்கச்சொன்ன
காதல் கடிதங்களை
பயந்து பயந்து
எடுத்துக்கொன்டு போய்
மற்றப்பெண்களிடம் தந்த
அந்த பயமான நாட்கள்.
பத்தாம் தேர்ச்சி
பெற்று அதிகப்படியான
மதிப்பென் பெற்றும் - என்னப்படிப்பது
எனத்தெறியாமல்
திரு திருவென முழிந்த
அந்த நாட்கள்.
கல்லூரிக்கு
சென்னை வரும்போது
உயரமான கட்டிடங்களையும்
நகர்ப்புர வாழ்க்கையையும்
வாய்த்திறந்து பார்ந்த
அந்த அதிசய நாட்கள்.
கல்லூரி நன்பர்களுடன்
பெரிய ஓட்டலுக்கு சென்று
சாப்பிடத்தெறியாமல் - தயங்கி தயங்கி
சாப்பிடாமல் முழிந்த
அந்த நாட்கள்.
நன்பர்களையெல்லாம்
காதல் தீண்ட - நான்
மட்டும் தனிமையில் நடந்த
அந்த தவிப்பான நாட்கள்.
பெண்களின்
நட்புக்காக - அவர்களின்
பார்வைக்கிடைக்காதா - என்று
ஏங்கிய அந்த
ஏக்கமான நாட்கள்.
பொறியாளனாய்
பட்டம் பெற்று - நல்ல நிறுவனத்தில்
வேலைக்காக
சுற்றிய அந்த
எதிர்ப்பார்ப்புகளான நாட்கள்.
இதோ
அழகான வேலை...
போதுமான ஊதியம்...
எதிப்பார்ப்புகளையும் -
மிஞ்சிய மரியாதை...
தேவைக்கதிகமான வளர்ச்சி - ஆனால்
என் ஏக்கங்கள் மட்டும்
மனதில் மறையாமல்
அதே எக்கத்தோடு...
பொறியாளர் கீழ்.கா.அன்புச்செல்வன்



எனக்கான ஒருத்தி...

நீன்ட நாட்களாய்
தேடிக்கொன்டிருக்கிறேன் - எனக்கான
ஒருத்தியை.
தொலைந்து போன
என் வாழ்க்கையின்
இரகசியத்தை - அவளிடம்
மட்டுமே பகிர்ந்து கொள்ள தேடினேன்.
சாலையோரம் நடக்கும் போது
கதவோரம் எட்டிப்பார்க்கும்
பெண்கள்
பின்னால் சில நாள்...
தெருமுனையில்
அமர்ந்துகொன்டு அரட்டையடிக்கும்
எங்களை பார்த்து
மெல்லச்சிரிக்கும்
பள்ளி பெண்களின் பின்னால் சிலநாள்....
திருவிழாவிற்கு வந்த
பக்கத்து வீட்டுப்பெண்களின்
முகவரி கேட்டு அவளிடம்
என் கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு
அவளின் அழைப்புக்காக
காத்திருந்து சிலநாள்....
கல்லூரி செல்லும் போது
வழியில்
மகளிர் கல்லூரியில் இருந்து
புன்னைகைக்கும்
அந்த பெண்ணின் பின்னால்
சில நாள்.
தங்கையோடு
வீடுக்கு வரும் - அவளின்
தோழியின் குறும்பு
பார்வைக்காக
அவள் பின்னால் சில நாள்.
மாதங்கள் வருடங்கள் ஆக
உண்மையை பஉனர்ந்து கொன்டேன்
தேடினேன் தேடுகிறேன்
எனக்கான ஒருத்தியை.
அவளோ
இன்னும் கேள்விக்குறியாய்.....

மன்னிக்க மட்டுமே தெரிந்தவள்

எப்படித்தான் முடிகிறதோ அவளால் எத்தனை பெரிய பிழை செய்தாலும் ஒரு முகச்சுளிப்போ சினமோ இன்றி ஒற்றைப் புன்னகையுடன்
என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள..
நியூட்டனின் மூன்றாம்விதி கூட இவளிடம்தான் பிழைத்துப்போகிறது. ஓவ்வொரு தாக்கத்துக்கும் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் இருக்குமென்கிறது விதி.
முகத்தில் பந்தால் எறிந்த ஒரு சின்னக் குழந்தையை வாரிஅணைத்து உச்சிமோந்து முத்தமிடும் தாயின் பரிவுதான் உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்கு தெரிகிறது .
ஓவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை செய்த பின்னரும் மறுநாள் ஏதும் நடவாதது போல அதே மாறாத புன்னகையுடன் என்னுடன் நீ பேசும்பொழுதுகளில் நீ வானமளந்து நிற்கிறாய். என் உயரம் வளைந்து நான் கூனிப்போய் உன் பெருவிரலிலும் உயரம் குறைந்து கிடக்கிறேன்.
 
பொறுமைக்கும் ஒருபெயர் பூமி என்பர். பூமியும் ஒருநாள் அதிர்வாகி கோபம்காட்டும். அலைகளால் கரையை தாலாட்டும் கடல்கூட ஒருநாளில் சுனாமியாகி ஊர்மனைக்குள் புகுந்து சினம்காட்டும்.
நீ மட்டும் எப்போதுமே எப்படித்தான் மாறாத புன்னகையுடனும் மன்னிக்கும் மனதுடனும் இருக்கின்றாய். உன் மன்னிப்புத்தான் என்னை அதிகமாக தண்டிக்கிறது தெரியுமா உனக்கு...............

சாதியத்திற்கெதிராகவும் ஈழ விடுதலை உணர்வோடும்
கீழ்.கா.அன்புச்செல்வன்



அழகிய காதல் கதை
""""""""""""""""""""""""""""""""
இரண்டு காதலர்கள் பைக்கில்
பயணித்தனர்...
அதிவேகத்தில்
சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் அவளிடம்
சொன்னான், இந்தா என்னுடைய
ஹெல்மெட் டை நீ அணிந்து கொள்
என்று...!
அவளும்
அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2
பேர்
பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் இறந்துவிட்டார். பெண்
ஹெல்மெட் அணிந்து கொண்டதால்
சிறிய காயக்களுடன் உயிர்
தப்பினார்''...
அவளோ அவனுடைய
கல்லறைக்கு முன்பு இருந்து கண்ணீர்
விட்டு முச்சுத் திணற திணற அழும்
போது அவள் தெரிந்து கொள்ளாத
ஒன்று....
''வேகக்கட்டுப்பாட்டை இழந்தது மட்டுமல்லாமல் பைக்கின்
ப்ரேக் உடைந்தது''...!
இதை அறிந்து தான் அவன் தன
உயரை பொருட்படுத்தாமல் தன்
காதலிக்கு ஹெல்மெட்டை
கொடுத்திருக்கிறான்
காதல் உயிரினை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன்
வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ
வைக்கின்றது...!
இது தான் உண்மையான காதல்...!!
மாமன் மகள்

நீ என் மாமன் மகள். என்னை விட நீ நான்கு வயது பெரியவள். நீ எப்போதுமே என்னிடம் மிகவும் பாசமாய் இருப்பாய். எல்லா நேரங்களிலும் நீ என் வீட்டில் தான் இருப்பாய் என்னோடு தான் விளையாடுவாய்.
நீ பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாய் நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு நாள் உன் வகுப்புத்தோழிகள் சேர்ந்து பள்ளியிலிருந்து பாதியிலே அழைத்துப்போனார்கள்,
நீயும் உன் தாவனியால் முகத்தை மூடிக்கொண்டு போனாய்.

நானோ பயந்து போய் ஓடிவந்து என்ன ஆச்சு என்று கேட்டேன் உன் தோழிகளோ அவள் யாரையும் பார்க்ககூடாது வயதுக்கு வந்திருக்கிறாள் என்றார்கள் நீயோ லேசாய் உன் தாவனியை விலக்கி ஒற்றைப்பார்வையால் என்னை பார்த்து சிறித்தாய்.

என்னால் எதையும் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்தேன்.
தினமும் பள்ளிக்கு செல்லும் போது நீ தான் எனக்கு தலை வாரி விடுவாய் நீ என் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து ஏண்டி முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு முதலில் பிறந்தாய் ஒரு நான்கு வருடம் கழித்து பிறந்திருந்தால் அவனையே கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்ல என் என் அம்மா உன்னிடம் சொன்னாள்,
அப்போது உன் கன்னிலிருந்து சில துளி கண்ணீர்த்துளிகள் என் மீது விழுந்தது அதன் அர்த்தத்தை அந்த நேரத்தில் என்னால் உனர்ந்து கொள்ள போதிய வயதும் விவரமும் எனக்கு இல்லை.

இப்போது இன்னும் வளர்ந்திருந்தும் என் மீதான உன அன்பும் நேசமும் அன்பும் அதிகமானதே தவிர குறைய வில்லை. எனக்கென தேடித்தேடி உடைகள் வாங்கித்தருவாய் .
உன்மையாய் சொல்ல வேண்டுமானால் ஒரு தாய் செய்ய வேண்டியதையெல்லாம் நீ தான் செய்வாய்.

நான் தினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் நீ பட்டப்படிப்பு முடித்திருந்தாய் உனக்கு திருமனம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்று சேர்ந்து உன் திருமன விழாவை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

நீயோ கடைசியாய் என்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென அழைத்தாய் நானும் வந்தேன், ஏண்டா நீ என்னை விட சின்னவனாய் பிறந்தாய் என என் கன்னத்தில் அறைந்து அழுதாய்.

இந்த வாழ்க்கையை நான் உன்னோடு மட்டும் தான் வாழ்ந்திருக்க வேண்டுமென சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாய். அதன் அர்த்தத்தை அபோது தான் என்னால் உனர முடிந்தது.

நான் முதன் முதலில் எனக்கும் உனக்குமுண்டான பிரிவை அப்போது தான் உனர்ந்தேன் நாளை முதல் நீ என்னோடு இருக்க மாட்டாய். என்னை விட்டு பிரியப்போகிறாய் என் அழுகையை நான் எப்படி உனர்த்துவதென தெறியாமல் தவித்தேன் நீயோ அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னை விட சின்னவளாய் பிறந்து காலம் முழுக்க உன்னோடு வாழ வெண்டுமென சொல்லி ஓடி மறைந்தாய்.

உன் திருமனமும் நடந்து முடிந்தது இதோ காலங்கள் கடந்து விட்டது. உனக்கு அன்புக்கு ஒரு மகனும் ஆசைக்கு ஒரு மகளும். ஆனால் என்னால் மட்டும் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனம் விரும்ப வில்லை.


யார் யாரோ சொல்லியும் என்னால் மனம் மாற முடியவில்லை. நீயும் பலமுறை வற்புறுத்தியும் என்னால் வேறு திருமனம் செய்ய தோன்ற வில்லை. நீ அள்ளித்தந்த அன்பை வேறு ஒருவளிடமிருந்து பெற மனம் வர வில்லை. நீ முத்தமிட்ட இடத்தில் வேறு ஒருவளை முத்தமிட அனுமதிக்க முடியவில்லை.

ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க வேண்டுமென அவசியமல்ல ஆம் சிலர் ஆசைப்பட்டவர்களோடு வாழ்கிறார்கள். பலர் வெறும் ஆசைகளோடு மட்டும் வாழ்கிறார்கள். நானும் உன் அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து விட்டுப்போகிறேன்.

மாறாத நேசத்தோடு

கீழ்.கா.அன்புச்செல்வன்.
நட்புக்குள் காதல்

நாம் இருவரும் சிறு வயது முதலே நன்பர்கள், பள்ளிக்காலம் முதல் கல்லூரி வரை ஒன்றாகத்தான் படித்தோம். ஒரு 3 - ம் வகுப்பு கோடை விடுமுறையின் போது நீ உன் பாட்டி வீட்டிற்கு செல்வதாய் இருந்த்து ஆனால் நீயோ வீட்டில் அடம்பிடித்து நான் பாகமாட்டென் என்று உன் கோடை விடுமுறையை என்னோடு செலவிட்ட்து இன்னும் என்னுள் பசுமை மாறாமல் இருக்கிறது.

ஒரு முறை நான் சரியாக பாடத்தை கவனிக்காததற்காக ஆசிரியை என்னை அடித்தார் அப்போது என்னை விட நீ தான் அதிகமாய் கொபப்பட்டாய் அந்த ஆசிரியர் மீது அதோடு விடாமல் அவருடைய இரு சக்கர வாகனத்தையும் ஊசியால் குத்தி பஞ்சர் செய்தாய் அப்போது தான் உன் முகம் சற்று புன்னகையானது,

இப்படி ஒவ்வொறு சம்பவமும் நம் நட்பின் பலத்தை இன்னும் அதிகமாக்கியது. ஒரு சில நேரங்களில் நான் விலையாடச்செல்வதற்காக என் அம்மா என்னை திட்டுவாள் அப்போதும் நீ தான் எனக்காக பரிந்து பேசுவாய் அந்த பரிவில் தான் நட்பின் இலக்கனத்தை கண்டேன்.

உன் சகோதரனின் திருமனத்திற்க்கு அழைப்பிதழ் அடிக்கும் போது எல்லோருடைய பெயரையும் எழுதினார்கள் ஆனால் நன்பர்கள் என்று என்பெயரையும் எழுதச்சொல்லி அடம்பிடித்தாய் நீ செல்லப்பிள்ளை என்பதால் உன் அடம் தான் வென்றது,

ஒரு முறை பள்ளிக்கட்டனம் செலுத்துவதற்க்காக என் அம்மா பனம் கொடுத்தார் அதை எப்படியோ தொலைத்து விட்டேன் எப்படி என் அம்மாவிடம் சொல்வதென தெறியாமல் முழித்த சமயத்தில் நீ உன்னுடைய பனத்தை தொலைத்து விட்டதாய் சொல்லி திரும்ப பணம் வாங்கி வந்து எனக்கு கட்டினாய் அப்போது மிகவும் சந்தோசப்பட்டேன் உன் நட்பின் அன்பை.

அது நீ பருவம் அடைந்திருந்த காலம் என்பதால் என் அன்னை ஒரு சில நாட்கள் அவளை பார்க்காதே என்றார் நானும் உன்னை பார்க்காமல் இருந்தேன் இரண்டு நாட்கள் கழித்து நீ என் வீட்டிற்கு வந்து என் சட்டையை பிடித்து தலையில் 2 கொட்டு வைத்து ஏண்டா என்னை பார்க்க வர வில்லை என்றாய்.

எல்லா நட்பும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்வதில்லை ஆமாம் முன்பைப்போல் உன்னிடம் என்னால் பேசமுடியவில்லை சற்று இடைவெளி விட்டே அமர்கிறேன் ஆனால் நீயோ எந்த சலனமுமில்லாமல் என்னிடம் பேசுகிறாய் என்னடா ஆச்சு என்று உனக்கு என் தலையை பிடித்து குலுக்கினாய் ஆம் பென்னே அப்போது தான் நான் அந்த தடுமாற்றத்திலிருந்து விடுபட்டேன்.

கல்லூரிக்காலத்திலும் உன்னை மகளிர் கல்லூரியில் சேர்க்கப்போவெதாய் சொன்னபோது அதெல்லாம் முடியாது என்று சொல்லி என் கல்லூரியில் வந்து சேர்ந்தாய் அப்போது தான் நம் நட்பிற்கு வண்ணம் கூடியது.

ஒரு நாள் நம் நட்பை வியந்த உன் தாய் உன் அண்ணியிடம் சொன்னார் இவள் இவனை பிறியக்கூடாதென அடம்பிடிக்கிறாளே எப்படியும் கல்யானத்திற்கு பின்பு பிறிந்து தானே ஆகவேண்டுமென்றார் அப்போது நீ சொன்னாய் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் கவலை படாதிர்கள் என்றாய்,

அப்போது தான் எனக்கு முதன் முறையாய் உன்னை எப்படி என்னால் பிறிய முடியும் என்று தோன்றியது.

பல நாள் யோசித்துப்பார்த்தேன் நிச்சயமாய் சொல்ல முடியும் உன்னை பிறிந்து என்னால் இருக்க முடியாது இப்படியே இப்படியே என்ன செய்வதென்று தெறியாமல் தடுமாறினேன்.



ஒரு நாள் உனக்கு வரன் பார்ப்பதற்க்காக எப்படிப்பட்ட பையன் வேண்டுமென உன் தந்தை கேட்டார் நீயோ இவனைப்போல் பாருங்கள் என்று என்னை கான்பித்தாய் அதற்கு பேசாமல் அவனையே கட்டிக்கடி என்று உன் அண்ணி கிண்டலாய் சொன்னார் நீயும் போங்க அன்னி என்று செல்லமாய் கோபித்தாய்.

அப்போது தான் எனக்கு நீ கடைசி வரை வேண்டுமென்பதை முடிவு செய்தேன் உன் வீட்டில் வரன் பார்க்கும் வேலை படு வேகமாக நடந்தது. ஆனால் எனக்குத்தான் என்ன செய்வதென் தெறியாமல் விழி பிதுங்கி நின்றேன் ஏனெனில் உனக்கு காதல் பிடிக்காது. நான் என் விருப்பத்தை சொல்லி நம் நட்பை இழக்க விரும்ப வில்லை.

ஒரு வேளை எனக்கிறுக்கும் அதே விருப்பம் உனக்கும் இருந்திருந்தால் நிச்சயம் நீயாய் வெளிப்படுத்துவாய் என்று நம்பினேன் ஆனால் நீயோ எந்த வித சலனமுமில்லாமல் என்னோடு இருந்தாய்.

ஒரு உன் தந்தை நாள் ஒரு புகைப்படத்தை உன்னிடம் தந்து இவனை பிடித்திருக்கிறதா என்றார் நீயோ பிரித்து பார்க்காமல் என்னிடம் தந்து உனக்கு பிடித்திருக்கிறதா சொல் என்னிடம் காட்டி எனக்கு என்ன பிடிக்கும் என்பதை என்னை விட இவனுக்குத்தான் தெறியும் என்று சொன்னாய்.

உன் தந்தையோ  நல்லப்பையன்பா!
இவள நல்லா கவனிச்சுக்குவான்!
என்றார் ஆனால் என்னை விட இவளை வேறு யாராளும் நல்லா கவனிச்சுக்க முடியாது என்று உன் தந்தையிடம் சத்தமாய் சொல்ல தோன்றியது ஆனால் முடியாமல் உள்ளுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டேன்.



ஒரு வழியாய் உன்னை சம்மதிக்க வைக்கும் பொருப்பு என்னிடம் வந்தது நானும் நல்லப்பையண்டா கட்டிக்கோ என்றேன் நீயோ உன்னொட விருப்பம்டா என்று சந்தோசமாய் ஓடி மறைந்தாய் அப்போது தான் எனக்கு புரிந்தது உனக்கு என் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை என்று,

உன் திருமன நாளும்  வந்தது  சந்தோசமாய் நடந்த அந்த திருமனத்தில் நீ உன் கணவனிடத்தில் என்னை அறிமுகம் செய்தாய் இந்த திருமனத்திற்கு காரனம் இவன் தான் உங்களை தேர்ந்தெடுத்தவனும் இவன் தான் என்று என்னை கான்பித்தாய். நானோ நம்முடைய புனிதமான நட்பிற்க்காக என்னுடைய அழகான காதலை கொலை செய்து விட்டு வாழ்த்தினேன்.

இப்படியே உன வாழ்க்கை பயனமும் தொடர்ந்தது.
நம் நட்பும் எந்த கசப்பும் இல்லாமல் தொடர்ந்தது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ திருமணம் செய்து கொள்ள தோன்ற வில்லை அதற்கான காரனத்தையும் என்னால் சொல்ல முடிய வில்லை.

நீ வரும் போதெல்லாம் உன்னிடம் என் அம்மா உன்னிடம் புலம்புவார் இவன் ஏன்மா கல்யானம் வேண்டாங்கறான் என்று. நீயோ என்னடா யாரையாவது காதலிக்கிறாயா சொல்லுடா அம்மாவிடம் நான் பேசுகிறேன் என்பாய் நான் எப்படி சொல்வேன் என் மணம் முழுக்க இருந்தவள் நீ தான் - நீ மட்டும் தான் என்பதை,

இப்போதும்

சிறிதாய் உறுத்தத்தான் செய்கிறது இந்த புனிதாமான நம் நட்புக்குள் எப்படி காதல் வந்தது என்று!!!!!!!