மன்னிக்க மட்டுமே தெரிந்தவள்
எப்படித்தான் முடிகிறதோ அவளால் எத்தனை பெரிய பிழை செய்தாலும் ஒரு முகச்சுளிப்போ சினமோ இன்றி ஒற்றைப் புன்னகையுடன்
என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள..
என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ள..
நியூட்டனின் மூன்றாம்விதி கூட இவளிடம்தான் பிழைத்துப்போகிறது. ஓவ்வொரு தாக்கத்துக்கும் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கம் இருக்குமென்கிறது விதி.
முகத்தில் பந்தால் எறிந்த ஒரு சின்னக் குழந்தையை வாரிஅணைத்து உச்சிமோந்து முத்தமிடும் தாயின் பரிவுதான் உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்கு தெரிகிறது .
ஓவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை செய்த பின்னரும் மறுநாள் ஏதும் நடவாதது போல அதே மாறாத புன்னகையுடன் என்னுடன் நீ பேசும்பொழுதுகளில் நீ வானமளந்து நிற்கிறாய். என் உயரம் வளைந்து நான் கூனிப்போய் உன் பெருவிரலிலும் உயரம் குறைந்து கிடக்கிறேன்.
பொறுமைக்கும் ஒருபெயர் பூமி என்பர். பூமியும் ஒருநாள் அதிர்வாகி கோபம்காட்டும். அலைகளால் கரையை தாலாட்டும் கடல்கூட ஒருநாளில் சுனாமியாகி ஊர்மனைக்குள் புகுந்து சினம்காட்டும்.
பொறுமைக்கும் ஒருபெயர் பூமி என்பர். பூமியும் ஒருநாள் அதிர்வாகி கோபம்காட்டும். அலைகளால் கரையை தாலாட்டும் கடல்கூட ஒருநாளில் சுனாமியாகி ஊர்மனைக்குள் புகுந்து சினம்காட்டும்.
நீ மட்டும் எப்போதுமே எப்படித்தான் மாறாத புன்னகையுடனும் மன்னிக்கும் மனதுடனும் இருக்கின்றாய். உன் மன்னிப்புத்தான் என்னை அதிகமாக தண்டிக்கிறது தெரியுமா உனக்கு...............
சாதியத்திற்கெதிராகவும் ஈழ விடுதலை உணர்வோடும்
கீழ்.கா.அன்புச்செல்வன்
No comments:
Post a Comment