Wednesday, 10 December 2014



அந்த நாட்கள்
""""""""""""""""""""""""""""""""""""""""
அந்த நாள்
என் வாழ்க்கையின்
மறக்க முடியாத நாட்கள்.
பக்கத்து வீட்டு
நன்பர்கள் எல்லாம்
காண்வென்டுக்கு போக - நான்
மட்டும்
அரசுத்தொடக்கப்பள்ளிக்கு
போன நாட்கள
அரசுப்பள்ளியிலும்
பல நன்பர்கள் - தோல்ப்பையை
எடுத்துச்செல்ல
நானும் சில நன்பர்களும்
துனிக்கடையில் தரும் - மஞ்சள் கலர்
பையை தூக்கிச்சென்ற நாட்கள்.
பள்ளிக்கு
எல்லோறும் சைக்கிளில்
செல்லும் போது - நானும்
சிலரும் மட்டும்
நடந்து போகும் போது - சைக்களில்
செல்வபவர்களை
ஏக்கமாய் பார்த்த அந்த நாட்கள்.
பட்டன் அறுந்த
கால்ச்சட்டையை முடிச்சுப்போட்டும்,
பட்டன் அறுந்த சட்டையை
தேங்காய் நாரினாலும்
கட்டிச்சென்ற
கொடுமையான நாட்கள்.
கோடை விடுமுறைக்கு
மாமா வீட்டிற்கு செல்ல - சட்டையில்லாமல்
நன்பனின் சட்டையை
கடன் வாங்கி போட்டுச்சென்ற
அந்த நாட்கள்.
8-ம் வகுப்பு படிக்கும் போது
12-ம் வகுப்பு அண்ணன்கள் - கொடுக்கச்சொன்ன
காதல் கடிதங்களை
பயந்து பயந்து
எடுத்துக்கொன்டு போய்
மற்றப்பெண்களிடம் தந்த
அந்த பயமான நாட்கள்.
பத்தாம் தேர்ச்சி
பெற்று அதிகப்படியான
மதிப்பென் பெற்றும் - என்னப்படிப்பது
எனத்தெறியாமல்
திரு திருவென முழிந்த
அந்த நாட்கள்.
கல்லூரிக்கு
சென்னை வரும்போது
உயரமான கட்டிடங்களையும்
நகர்ப்புர வாழ்க்கையையும்
வாய்த்திறந்து பார்ந்த
அந்த அதிசய நாட்கள்.
கல்லூரி நன்பர்களுடன்
பெரிய ஓட்டலுக்கு சென்று
சாப்பிடத்தெறியாமல் - தயங்கி தயங்கி
சாப்பிடாமல் முழிந்த
அந்த நாட்கள்.
நன்பர்களையெல்லாம்
காதல் தீண்ட - நான்
மட்டும் தனிமையில் நடந்த
அந்த தவிப்பான நாட்கள்.
பெண்களின்
நட்புக்காக - அவர்களின்
பார்வைக்கிடைக்காதா - என்று
ஏங்கிய அந்த
ஏக்கமான நாட்கள்.
பொறியாளனாய்
பட்டம் பெற்று - நல்ல நிறுவனத்தில்
வேலைக்காக
சுற்றிய அந்த
எதிர்ப்பார்ப்புகளான நாட்கள்.
இதோ
அழகான வேலை...
போதுமான ஊதியம்...
எதிப்பார்ப்புகளையும் -
மிஞ்சிய மரியாதை...
தேவைக்கதிகமான வளர்ச்சி - ஆனால்
என் ஏக்கங்கள் மட்டும்
மனதில் மறையாமல்
அதே எக்கத்தோடு...
பொறியாளர் கீழ்.கா.அன்புச்செல்வன்

No comments:

Post a Comment