Wednesday, 10 December 2014

எதிர் வீட்டுப்பென்

அமைதியாய் இருக்கும் என் வீட்டை உன் சிரிப்பு சத்தத்தால் அடிக்கடி தினரடிக்க வருவாய், ஆம் நி என் எதிர் வீட்டில் இருப்பவள் எப்போதுமே நீ அதிகமாய் இருப்பது என் வீட்டில் தான் என் அம்மாவை அத்தை என்று உரிமையோடு தான் அழைப்பாய் என்னை விட என் வீட்டில் நீ தான் செல்லம்,

தினமும் மாலையில் தவராமல் ஒரு குட்டி கவுனுடன் என் வீட்டிற்கு படிக்க வருவாய் உன்னை விட நான் 2 வருடம் பெரியவன் ஆம் நீ 10 - ம் வகுப்பு நான் 12 - ம் வகுப்பு. நீ காலையில் எப்போதும் என்னொடு தான் பள்ளிக்கு வருவாய் வரும் போது தினமும் 1 ரோஜா மலரை கொண்டு வருவாய் ஆம் வழியில் இருக்கும் மரியன்னையின் பாத்த்தில் வைக்க உனக்கு மரியன்னை மிகவும் பிடிக்கும் அதனால் தான் எனக்கும் பிடிக்கும் என்பது உனக்கு தெறியாமலே இருந்தது,

ஒரு நாள் என் அண்ணன் மகளுக்கு பென்சில் சீவுகையில் தவறுதலாய் என் கையை அருத்துகொண்டேன் இரத்தம் கசிவதை கவனித்த நீ அவசரமாய் உன் கையால் அழுத்திப்பிடித்துக்கொண்டு உன் தவனியின் ஒரு பகுதியை கிழித்து என் விரலுக்கு கட்டு போட்டாய் இரத்தக்கசிவு நின்று போனது ஆனால் உன் பதற்றம் மட்டும் நிற்கவே இல்லை,

அப்போது தான் முதன் முதலாய் உன் மீது ஒரு ஈர்ப்பு வந்த்து. அடுத்து வந்த ஒரு மழை காலத்தில் நான் நனைந்து வந்தேன் அவசரமாய் ஓடி வந்த நீ ஒரு டவளை எடுத்து என் தலையை துவட்டினாய் மழையை திட்டிக்கொண்டே ஆனால் எனக்கு மழை பிடுக்கும் அதனால் தான் நனைந்து வந்தேன் என்று உனக்கு தெறியாது.



இப்படி பல சம்பங்களில் நீ என் மீது அதிகப்படியான அக்கரை எடுத்துக்கொள்பவளாகவே இருந்தாய் படிப்பிளும் நீ படு சுட்டி நீ 10 - ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உன் மேல் நிலைக்கல்விக்காக என்ன பிரிவு எடுக்கலாம் என்று உன் த்ந்தை என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார் ஆனால் நீயோ நான் என்ன பிரிவு எடுக்கட்டும் என்று என்னிடம் ஆவலாய் ஓடோடி வந்து கேட்டாய் நானோ நீ கணிதப்பிரிவு அடுத்துக்கொள் என்றேன் நீயுன் அப்படியே உன் தந்தையிடம் சொன்னாய்,

நீ ஒரு துனி எடுக்க வேண்டுமென்றால் கூட என்ன கலர் எடுக்கட்டும் என்று என்னிடம் தான் கேட்பாய் இப்படி உன்னை பற்றிய எல்லாவற்றையும் நீ என்னிடம் மட்டும் தான் கேட்பாய் பொதுவாகவே நீ எல்லாவற்றை பற்றியும் என்னிடம் விவாதிப்பாய் கல்வி,அரசியல்,அறிவியல்,சினிமா மற்றும் பொது அறிவு என எல்லாவற்றையும் விவாதிப்பாய் அதற்க்கான என் விமர்சனங்களை ரசிப்பாய்,

இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நமக்குள் நடந்தேறின இப்போதெல்லாம் உன்னை எல்லாரும் என் உறவுக்கார பென்னாகவே பார்த்தார்கள் நீ மேல் நிலை கல்வி முடித்து அடுத்து என்ன படிக்கட்டும் என்றும் என்னிடம் தான் கேட்டாய் நானும் மருத்துவம் படி நம் குடும்பத்தில் மருத்துவ துறையில் தான் யாருமே இல்லை என்றேன் நீயும் பிடிவாத்த்தோடு மறுத்துவம் தான் படிப்பென் என்று போய் சேர்ந்தாய்,

இப்படியே சில காலங்கள் கடந்த்து நானும் என் பொறியியல் கல்வியை முடித்து ஒரு தனியார் தொழிற்ச்சாலையில் பணிக்கு சென்றேன்  நீயும் உன் கல்வியை முடித்து விட்டு பயிர்ச்சிக்காக அருகில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு சென்றாய்,




இப்போதெல்லாம் என் மேல் இன்னும் அதிகமாய் கவனம் எடுத்துக்கொள்கிறாய் உடல் நிலையை எப்படி கவனித்து கொள்வது என்றேல்லாம் சொல்வாய் வாரத்திற்கொறு முறை முழு பரிசோதனைக்கு அழைத்துச்செல்வாய். இப்போதெல்லாம் நான் அடிக்க்கடி அந்த மரியன்னைக்கு நன்றி சொல்வதுண்டு உன்னை எனக்கு தந்தமைக்காக,

ஒரு நாள் உன் வீட்டில் திருமனப்பேச்சு நடப்பதாய் என் அம்மாவிடம் சொன்னாய் அன்று இரவு என் அம்மா என்னிடம் உன்னிடம் ஒன்று கேட்பேன் ஆனால் சரி என்று தான் சொல்ல வேண்டும் என்று புதிர் போட்டார்கள் இது நாள் வரையில் நீங்கள் என்னிடம் எதுவுமே கேட்டதில்லை என்ன வேண்டும் கேலுங்கல் அம்மா என்றேன் உடனே அம்மா அவளை நம் வீட்டு மருமகளாக்கி விடலாமா என்றார் என்னுள் எவ்வளவு அளவில்லாத சந்தோசத்தோடு தலையாட்டினேன்,

அடுத்த நாள்  உன் தந்தை என் வீட்டிற்கு வந்து உனக்கு வரன் பார்த்திருப்பதாக சொல்லி உன் உறவுக்காரப்பயனின் புகைப்படத்தை என் அம்மாவிடம் கான்பித்தார் என் அம்மாவும் உடனே எதற்கு அவளுக்கு வெளியில் வரன் பார்க்கிறீர்கள் என் வீட்டிற்கு மருமகளாக அனுப்பி விடுங்கள் என்றார்,

உடனே உன் தந்தை மன்னித்து விடுங்கள் வெவ்வேறு சாதிக்குள் திருமனம் செய்து வைக்க எனக்கு உடன்பாடில்லை என்னை மன்னித்து விடுங்கள் நாம் வெறும் நட்பாகவே இருந்து விட்டு போகலாம் உறவுக்காரர்களாக வேண்டாம் என்றார்,

உனக்காக என்னை விட என் அம்மா தான் மிகவும் வருந்தினார் அடுத்து சில முறை நானும் உன் தந்தையுடன் பேசிப்பார்த்தேன் ஆனால் அவருடைய பிடிவாதம் மாறவில்லை.



ஒரு நாள் நீ அவசரமாக என்னிடம் வந்து நாம் பதிவு திருமனம் செய்து கொள்ளலாம் என்றாய் நானோ அவர் உனக்கு தந்தையென்பதை விட எனக்கு மாமா அதனால் அவருக்கு இப்படியொரு இழிவை என்னால் தர முடியாது என்றேன் உடனே நீ சற்றும் யோசிக்காமல் என்னை கட்டிப்பிடித்து அழுதாய் ஆனால் நானோ உனக்கும் ஆறுதல் சொல்ல முடியாமல் என்னையும் ஆறுதல் படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தேன்.

நீயும் உன் தந்தையிடம் என்னை வேறு ஒருவருக்கு கட்டி வைத்தாள் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றெல்லாம் மிரட்டினாய் ஆனால் எதற்க்கும் உன் தந்தை தன் பிடிவாத்த்தை கைவிடவே இல்லை.

உன் திருமண நாளும் நெறுங்கியது கடைசி நாளில் நீ என்னோடு சற்று பேச வேண்டுமென உன் தந்தையுடன் அனுமதியோடு என்னிடம் பேசினாய் இந்த காதலை மறந்து என்னால் வேறொருவனோடு என்னால் வாழ முடியாது அப்படியே இந்த திருமணம் நடந்தாலும் என் உடலில் உயிர் இருக்காது என்றாய் ஆனால் எனக்கோ உனக்கும் உன் தந்தைக்கும் ஒரு அவப்பெயரை ஏற்படுத்த விருப்பமில்லை பெற்றோருக்காக நம் காதலை தியாகம் செய்து விடலாம் என்றேன் நீயோ கன்னீரோடு தலையாட்டி விட்டு சென்றாய்,

எப்போதுமே நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன் ஆம் உனக்கு பிடித்த அந்த மரியன்னையிடம் தினமும் பிரார்த்திக்கிறேன் நீ என்றும் நலமாய் வாழ்வதறக்காக,,,

ஆம் பென்னே!
உன்னோடு வாழ்ந்தால் என்ன? - உன்
நினைவுகளோடு வாழ்ந்தால் என்ன?
இதோ உன்
உன் நினைவுகளோடு

வாழ்ந்து விட்டு போகிறேன்!!!!

No comments:

Post a Comment