பேருந்துக்காதல்
அது ஒரு பசுமை காலம் ஆம் கோடை விடுமுறை முடிந்து பள்ளி ஆரம்பித்த
காலம், பெரிய முக்ககண்னாடி அனிந்து வருவது போல வரும் அந்த டவுன் பஸ்ஸில்
கூட்டம் முட்டி மோதிக்கொண்டு வரும், அடுக்கடுக்காய் பல
முகங்கள் நடுவிலே அதில் வன்ன தேவதையாய் உன் முகம்,
வழித்து சீவிய தலையுடன் நான் நிற்பேன் நீயோ வணன தேவதையாய் காட்சி
தருவாய், நான் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழிற்நுட்ப கல்வி முதல்
ஆண்டு நீயோ மேல் நிலை கல்வி முதலாம் ஆண்டு, உனக்கு எப்படித்தான்
கிடைக்குமே தெறியாது அந்த் ஜன்னலோர இருக்கை?? என் நிறுத்தம் வந்தவுடன்
ஒரு சின்ன புன்னகையை அள்ளி வீசுவாய் அதன் பின்பே தான் நான் ஏறுவேன்,
உன் பள்ளி நிறுத்தம் வந்தவுடன் உன் சக தோழிகளுடன் இறங்கிச்செல்வாய்
அந்த நேரத்தில் ஒரு முறையேனும் திரும்புவாயா? என எண்னத்தோன்றும் ஆனால் பல நாட்கள் அந்த எண்னம் நிறைவேறவே இல்லை.
ஒரு நாள் உனக்கு தெறியாமல் நான் பேருந்தில் ஏறினேன் நீயோ என்னை
கானாமல் உன் பார்வையாய் எங்கெங்கோ செலுத்தினாய் கடைசியில் நீ என்னை தான் தேடுகிறாய்
என்பதை உறுதி செய்து கொண்டு உன் முன் வந்து நின்றேன் அப்போது நீ சிந்திய அந்த ஒற்றை
சிறிப்பில் சிதறிய என் கல்லூரி சீறுடையை சீர்படுத்த நான் மிகவும் சிரமப்பட்டேன்,
தினமும் காலை எட்டு மணி பேறுந்தும் மாலை 5 மணி பேறுந்தும் நாம் இருவருக்கும் தேவ தூதுவனாகவே தென்பட்டது.
ஒரு நாள் நான் உனக்கு சேர்த்து நட்த்துனரிடம் பயனச்சீட்டு வாங்க முற்ப்பட்டேன் அதற்கு
முன் நீயே நாம் இருவருக்கும் சேர்த்து வாங்கி
விட்டேன் அப்போது தான் நாம் இருவருக்குள்ளும் ஒரு பரஸ்பரம் ஏற்ப்பட்டது,
இப்போது உனக்கும் எனக்குமான இடைவெளி மிகவும் குறைந்திறுந்தது
ஆம் உனக்காக நானும் எனக்காக நீயும் காத்திருக்கும் தருனங்கள் எல்லாம் நிகழ்ந்தேறின,
நாம் அனைத்து நிகழ்வுகளை பற்றி விவாதிக்கும் அளவுக்கு நமக்குள் நெருக்கம்
ஏற்ப்பட்டிருந்தது. ஒரு நாள் உன்னையறியாமல்
உன் துப்பட்டா என் மீது மோதியது அந்த ஒரு கணம் நான் மெய் மறந்து தான் போனேன் என்பது
உனக்கு நன்றாய் தெறியும்.
இப்படியே நம் நாட்களும் நகர்ந்து கொண்டே தான் போனது ஆனால் இது
காதலா எனபதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை ஆனால் உறுதியாய் தெறியும் இது வெறும் நட்பு அல்ல
என்று,
காலங்கள் வெகுவாய் சென்றது ஆம் இப்போது நீ இளநிலை கனினி பொறியியல்
நான் இளநிலை பிளாஸ்டிக் பொறியியல் ஆனாலும் நாம் இருவருக்கும் இடையிலான அந்த உறவுக்கான
பெயர் என்னவென சொல்லிக்கொள்ளாமலே கடந்தோம்,
நாட்கள் கடந்தது இருதி தேர்வும் முடிந்தது அந்த கடைசி தினத்தில்
இருவரும் பேருந்தில் பயனித்தோம் உன்னிடம் ஏதேதோ பேச முற்ப்பட்டேன் ஆனால் என் நா வறண்டு
வார்த்தைகள் வர மறுத்தன என் பேருந்து நிறுத்தம் நெருங்க நெருங்க ஏதோ மரனத்தை நெருங்குவதாகவே
தோன்றியது.
இது நாள் வரையிலான உறவுக்கான பதிலை நீயும் தருவதாக தெறியவில்லை
இருதியில் என் பேருந்து நிறுத்தம் வர கலக்கத்தோடு இறங்கினேன் பேருந்து மெதுவாய் நகர்ந்தது
நீ கன் கலங்கியபடி ஜன்னலுக்கு இடையில் கையசைத்தாய் நானோ பதில்
கையசைக்க முடியாமல் ஓடி மறைந்தேன்.
அதன் பின்பு உன்னை பார்க்கும் சந்தர்ப்பம் அமைய வில்லை நீ எங்இருக்கிறாய்
எப்படியிருக்கிறாய் எதுவும் தெறியாது ஆனால் உன்னோடு நான் இருந்த காலங்கள் இன்னும் பசுமையாய்
என்னோடு வாழ்ந்து கொண்டிருக்கிறது ஆம் நீ கிடைத்திருந்தால் எனக்கு மனைவியாகியிருப்பாய்
கிடைக்காமல் போய் விட்டாய் அதனால் என்ன கடைசி வரை காதலியாகவே இருப்பாய்,,,,,,,
No comments:
Post a Comment