Wednesday, 10 December 2014

நட்புக்குள் காதல்

நாம் இருவரும் சிறு வயது முதலே நன்பர்கள், பள்ளிக்காலம் முதல் கல்லூரி வரை ஒன்றாகத்தான் படித்தோம். ஒரு 3 - ம் வகுப்பு கோடை விடுமுறையின் போது நீ உன் பாட்டி வீட்டிற்கு செல்வதாய் இருந்த்து ஆனால் நீயோ வீட்டில் அடம்பிடித்து நான் பாகமாட்டென் என்று உன் கோடை விடுமுறையை என்னோடு செலவிட்ட்து இன்னும் என்னுள் பசுமை மாறாமல் இருக்கிறது.

ஒரு முறை நான் சரியாக பாடத்தை கவனிக்காததற்காக ஆசிரியை என்னை அடித்தார் அப்போது என்னை விட நீ தான் அதிகமாய் கொபப்பட்டாய் அந்த ஆசிரியர் மீது அதோடு விடாமல் அவருடைய இரு சக்கர வாகனத்தையும் ஊசியால் குத்தி பஞ்சர் செய்தாய் அப்போது தான் உன் முகம் சற்று புன்னகையானது,

இப்படி ஒவ்வொறு சம்பவமும் நம் நட்பின் பலத்தை இன்னும் அதிகமாக்கியது. ஒரு சில நேரங்களில் நான் விலையாடச்செல்வதற்காக என் அம்மா என்னை திட்டுவாள் அப்போதும் நீ தான் எனக்காக பரிந்து பேசுவாய் அந்த பரிவில் தான் நட்பின் இலக்கனத்தை கண்டேன்.

உன் சகோதரனின் திருமனத்திற்க்கு அழைப்பிதழ் அடிக்கும் போது எல்லோருடைய பெயரையும் எழுதினார்கள் ஆனால் நன்பர்கள் என்று என்பெயரையும் எழுதச்சொல்லி அடம்பிடித்தாய் நீ செல்லப்பிள்ளை என்பதால் உன் அடம் தான் வென்றது,

ஒரு முறை பள்ளிக்கட்டனம் செலுத்துவதற்க்காக என் அம்மா பனம் கொடுத்தார் அதை எப்படியோ தொலைத்து விட்டேன் எப்படி என் அம்மாவிடம் சொல்வதென தெறியாமல் முழித்த சமயத்தில் நீ உன்னுடைய பனத்தை தொலைத்து விட்டதாய் சொல்லி திரும்ப பணம் வாங்கி வந்து எனக்கு கட்டினாய் அப்போது மிகவும் சந்தோசப்பட்டேன் உன் நட்பின் அன்பை.

அது நீ பருவம் அடைந்திருந்த காலம் என்பதால் என் அன்னை ஒரு சில நாட்கள் அவளை பார்க்காதே என்றார் நானும் உன்னை பார்க்காமல் இருந்தேன் இரண்டு நாட்கள் கழித்து நீ என் வீட்டிற்கு வந்து என் சட்டையை பிடித்து தலையில் 2 கொட்டு வைத்து ஏண்டா என்னை பார்க்க வர வில்லை என்றாய்.

எல்லா நட்பும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்வதில்லை ஆமாம் முன்பைப்போல் உன்னிடம் என்னால் பேசமுடியவில்லை சற்று இடைவெளி விட்டே அமர்கிறேன் ஆனால் நீயோ எந்த சலனமுமில்லாமல் என்னிடம் பேசுகிறாய் என்னடா ஆச்சு என்று உனக்கு என் தலையை பிடித்து குலுக்கினாய் ஆம் பென்னே அப்போது தான் நான் அந்த தடுமாற்றத்திலிருந்து விடுபட்டேன்.

கல்லூரிக்காலத்திலும் உன்னை மகளிர் கல்லூரியில் சேர்க்கப்போவெதாய் சொன்னபோது அதெல்லாம் முடியாது என்று சொல்லி என் கல்லூரியில் வந்து சேர்ந்தாய் அப்போது தான் நம் நட்பிற்கு வண்ணம் கூடியது.

ஒரு நாள் நம் நட்பை வியந்த உன் தாய் உன் அண்ணியிடம் சொன்னார் இவள் இவனை பிறியக்கூடாதென அடம்பிடிக்கிறாளே எப்படியும் கல்யானத்திற்கு பின்பு பிறிந்து தானே ஆகவேண்டுமென்றார் அப்போது நீ சொன்னாய் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் கவலை படாதிர்கள் என்றாய்,

அப்போது தான் எனக்கு முதன் முறையாய் உன்னை எப்படி என்னால் பிறிய முடியும் என்று தோன்றியது.

பல நாள் யோசித்துப்பார்த்தேன் நிச்சயமாய் சொல்ல முடியும் உன்னை பிறிந்து என்னால் இருக்க முடியாது இப்படியே இப்படியே என்ன செய்வதென்று தெறியாமல் தடுமாறினேன்.



ஒரு நாள் உனக்கு வரன் பார்ப்பதற்க்காக எப்படிப்பட்ட பையன் வேண்டுமென உன் தந்தை கேட்டார் நீயோ இவனைப்போல் பாருங்கள் என்று என்னை கான்பித்தாய் அதற்கு பேசாமல் அவனையே கட்டிக்கடி என்று உன் அண்ணி கிண்டலாய் சொன்னார் நீயும் போங்க அன்னி என்று செல்லமாய் கோபித்தாய்.

அப்போது தான் எனக்கு நீ கடைசி வரை வேண்டுமென்பதை முடிவு செய்தேன் உன் வீட்டில் வரன் பார்க்கும் வேலை படு வேகமாக நடந்தது. ஆனால் எனக்குத்தான் என்ன செய்வதென் தெறியாமல் விழி பிதுங்கி நின்றேன் ஏனெனில் உனக்கு காதல் பிடிக்காது. நான் என் விருப்பத்தை சொல்லி நம் நட்பை இழக்க விரும்ப வில்லை.

ஒரு வேளை எனக்கிறுக்கும் அதே விருப்பம் உனக்கும் இருந்திருந்தால் நிச்சயம் நீயாய் வெளிப்படுத்துவாய் என்று நம்பினேன் ஆனால் நீயோ எந்த வித சலனமுமில்லாமல் என்னோடு இருந்தாய்.

ஒரு உன் தந்தை நாள் ஒரு புகைப்படத்தை உன்னிடம் தந்து இவனை பிடித்திருக்கிறதா என்றார் நீயோ பிரித்து பார்க்காமல் என்னிடம் தந்து உனக்கு பிடித்திருக்கிறதா சொல் என்னிடம் காட்டி எனக்கு என்ன பிடிக்கும் என்பதை என்னை விட இவனுக்குத்தான் தெறியும் என்று சொன்னாய்.

உன் தந்தையோ  நல்லப்பையன்பா!
இவள நல்லா கவனிச்சுக்குவான்!
என்றார் ஆனால் என்னை விட இவளை வேறு யாராளும் நல்லா கவனிச்சுக்க முடியாது என்று உன் தந்தையிடம் சத்தமாய் சொல்ல தோன்றியது ஆனால் முடியாமல் உள்ளுக்குள் மட்டும் சொல்லிக்கொண்டேன்.



ஒரு வழியாய் உன்னை சம்மதிக்க வைக்கும் பொருப்பு என்னிடம் வந்தது நானும் நல்லப்பையண்டா கட்டிக்கோ என்றேன் நீயோ உன்னொட விருப்பம்டா என்று சந்தோசமாய் ஓடி மறைந்தாய் அப்போது தான் எனக்கு புரிந்தது உனக்கு என் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை என்று,

உன் திருமன நாளும்  வந்தது  சந்தோசமாய் நடந்த அந்த திருமனத்தில் நீ உன் கணவனிடத்தில் என்னை அறிமுகம் செய்தாய் இந்த திருமனத்திற்கு காரனம் இவன் தான் உங்களை தேர்ந்தெடுத்தவனும் இவன் தான் என்று என்னை கான்பித்தாய். நானோ நம்முடைய புனிதமான நட்பிற்க்காக என்னுடைய அழகான காதலை கொலை செய்து விட்டு வாழ்த்தினேன்.

இப்படியே உன வாழ்க்கை பயனமும் தொடர்ந்தது.
நம் நட்பும் எந்த கசப்பும் இல்லாமல் தொடர்ந்தது ஆனால் எனக்கு மட்டும் ஏனோ திருமணம் செய்து கொள்ள தோன்ற வில்லை அதற்கான காரனத்தையும் என்னால் சொல்ல முடிய வில்லை.

நீ வரும் போதெல்லாம் உன்னிடம் என் அம்மா உன்னிடம் புலம்புவார் இவன் ஏன்மா கல்யானம் வேண்டாங்கறான் என்று. நீயோ என்னடா யாரையாவது காதலிக்கிறாயா சொல்லுடா அம்மாவிடம் நான் பேசுகிறேன் என்பாய் நான் எப்படி சொல்வேன் என் மணம் முழுக்க இருந்தவள் நீ தான் - நீ மட்டும் தான் என்பதை,

இப்போதும்

சிறிதாய் உறுத்தத்தான் செய்கிறது இந்த புனிதாமான நம் நட்புக்குள் எப்படி காதல் வந்தது என்று!!!!!!!

No comments:

Post a Comment