மாமன் மகள்
நீ
என் மாமன் மகள். என்னை விட நீ நான்கு வயது பெரியவள். நீ எப்போதுமே என்னிடம் மிகவும் பாசமாய் இருப்பாய். எல்லா நேரங்களிலும் நீ என் வீட்டில் தான் இருப்பாய் என்னோடு தான் விளையாடுவாய்.
நீ
பத்தாம் வகுப்பு
படித்துக்கொண்டிருந்தாய்
நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
ஒரு
நாள் உன் வகுப்புத்தோழிகள் சேர்ந்து பள்ளியிலிருந்து பாதியிலே அழைத்துப்போனார்கள்,
நீயும்
உன் தாவனியால் முகத்தை மூடிக்கொண்டு போனாய்.
நானோ
பயந்து போய் ஓடிவந்து என்ன ஆச்சு என்று கேட்டேன் உன் தோழிகளோ அவள் யாரையும் பார்க்ககூடாது வயதுக்கு வந்திருக்கிறாள் என்றார்கள் நீயோ லேசாய் உன் தாவனியை விலக்கி ஒற்றைப்பார்வையால் என்னை பார்த்து சிறித்தாய்.
என்னால்
எதையும் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்தேன்.
தினமும்
பள்ளிக்கு செல்லும் போது நீ தான் எனக்கு தலை வாரி விடுவாய் நீ என் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து ஏண்டி முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு முதலில் பிறந்தாய் ஒரு நான்கு வருடம் கழித்து பிறந்திருந்தால் அவனையே கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கலாம்ல என் என் அம்மா உன்னிடம் சொன்னாள்,
அப்போது
உன் கன்னிலிருந்து சில துளி கண்ணீர்த்துளிகள் என் மீது விழுந்தது அதன் அர்த்தத்தை அந்த நேரத்தில் என்னால் உனர்ந்து கொள்ள போதிய வயதும்
விவரமும் எனக்கு இல்லை.
இப்போது
இன்னும் வளர்ந்திருந்தும் என் மீதான உன அன்பும் நேசமும் அன்பும் அதிகமானதே தவிர குறைய வில்லை. எனக்கென தேடித்தேடி உடைகள் வாங்கித்தருவாய் .
உன்மையாய்
சொல்ல வேண்டுமானால் ஒரு தாய் செய்ய வேண்டியதையெல்லாம் நீ தான் செய்வாய்.
நான்
பதினோராம்
வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் நீ பட்டப்படிப்பு முடித்திருந்தாய் உனக்கு திருமனம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். ஒட்டுமொத்த உறவுகளும் ஒன்று சேர்ந்து உன் திருமன விழாவை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
நீயோ
கடைசியாய் என்னிடம் கொஞ்சம் பேச வேண்டுமென அழைத்தாய் நானும் வந்தேன், ஏண்டா நீ என்னை விட சின்னவனாய் பிறந்தாய் என என் கன்னத்தில் அறைந்து அழுதாய்.
இந்த
வாழ்க்கையை நான் உன்னோடு மட்டும் தான் வாழ்ந்திருக்க வேண்டுமென சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாய். அதன் அர்த்தத்தை அபோது தான் என்னால் உனர முடிந்தது.
நான்
முதன் முதலில் எனக்கும் உனக்குமுண்டான பிரிவை அப்போது தான் உனர்ந்தேன் நாளை முதல் நீ என்னோடு இருக்க மாட்டாய். என்னை விட்டு பிரியப்போகிறாய் என் அழுகையை நான் எப்படி உனர்த்துவதென தெறியாமல் தவித்தேன் நீயோ அடுத்த ஜென்மத்திலாவது நான் உன்னை விட சின்னவளாய் பிறந்து காலம் முழுக்க உன்னோடு வாழ வெண்டுமென சொல்லி ஓடி மறைந்தாய்.
உன்
திருமனமும் நடந்து முடிந்தது இதோ காலங்கள் கடந்து விட்டது. உனக்கு அன்புக்கு ஒரு மகனும் ஆசைக்கு ஒரு மகளும். ஆனால் என்னால் மட்டும் எனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள மனம் விரும்ப வில்லை.
யார்
யாரோ சொல்லியும் என்னால் மனம் மாற முடியவில்லை. நீயும் பலமுறை வற்புறுத்தியும் என்னால் வேறு திருமனம் செய்ய தோன்ற வில்லை. நீ அள்ளித்தந்த அன்பை வேறு ஒருவளிடமிருந்து பெற மனம் வர வில்லை. நீ முத்தமிட்ட இடத்தில் வேறு ஒருவளை முத்தமிட அனுமதிக்க முடியவில்லை.
ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்க
வேண்டுமென அவசியமல்ல ஆம் சிலர் ஆசைப்பட்டவர்களோடு வாழ்கிறார்கள். பலர் வெறும் ஆசைகளோடு மட்டும் வாழ்கிறார்கள். நானும் உன் அன்போடும் பாசத்தோடும் வாழ்ந்து விட்டுப்போகிறேன்.
மாறாத
நேசத்தோடு
கீழ்.கா.அன்புச்செல்வன்.
No comments:
Post a Comment