Wednesday, 10 December 2014

டியுசன் காதல்

அது ஒரு கீற்று கொட்டகை அந்த கொட்டகையின் இடையில் அவ்வப்போது சூரிய ஒளி பளிச்சென்று வரும், ஆசிரியரின் டஸ்டர் தட்டும் ஓசை ஆம் அது ஒரு டியுசன் வகுப்பு பத்தாம் வகுப்புக்கு எல்லோரும் டியுசன் செல்வது வழக்கம்,

வகுப்பின் முதல் நாள் நீ புது நோட்டை எடுத்து முதல் பக்கத்தில் பிள்ளையார் சுழி எழுதி விட்டு பின்னர் உன் பெயரை எழுதினாய் நானும் தான் அறிமுகம் காலை 8 மனி முதல் 9.30 மனி வரை ஆங்கில வகுப்பும் மாலை 4 மனிமுதல் 5.30 மனி வரை கனித வகுப்பும்,

நீ பத்தாம் வகுப்பில் A பிரிவு நான் B பிரிவு பள்ளியில் ஆங்கில பாடத்திற்கு ஆசிரியர் இல்லை என்பதால் இரண்டு பிரிவிற்க்கும் ஒரே இட்த்தில் ஒரே நேரத்தில் தான் ஆங்கில வகுப்பு உன் வகுப்பு மனவர்களுக்கும் என் வகுப்பு மனவர்களுக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி தான் இருக்கும்.

ஒரு நாள் காலை டியூசனில் ஆங்கில வகுப்பின் போது எனக்கு தொடர்ச்சியாய் இருமல் வந்தது. ஆசிரியர் தன்னீர் குடிக்கும் படி சொன்னார் அருகில் இருந்த மற்றொரு சக மானவி தன்னீர் பாட்டிலை எனக்கு தர நீயோ அதை தட்டி விட்டு இதை குடி சுடு தன்னீர் என்று நீ வைத்திருந்த தன்னீர் பாட்டிலை தந்தாய். தன்னீர் குடித்ததும் எனக்கு இருமல் நின்று போனது ஆனால் உனக்கு தான் பதற்றம் குறையவே இல்லை,

இப்போதெல்லாம் உனக்கு எனக்குமான நெருக்கம் அதிகமாக இருந்தது, வீட்டு பாடம் எழுதி வந்தால் டேபிளில் தான் வைக்க வேண்டும் ஆனால் நான் வைத்த பின்பு தான் நீயும் வைப்பாய் இப்படியே காலங்கள் கடந்த்து,


ஒரு நாள்  என் பேனாவில் மை தீர்ந்த்து நீ உன் பேனாவில் ஒரு சில சொட்டு மைகளை அளித்தாய் அந்த சில சொட்டு மைகளை வாங்குவதற்க்காகவே நான் தினமும் வெற்று பேனாவுடன் வருவது உனக்கு தெறியாது,

விடைதாள்கள் தரும் போது ஒரு சில சமயங்களில் நம் இருவரின் விடைதாள்களும் ஒன்றாய் வரும் அந்த தருனங்களில் மிகவும் சந்தோசப்பட்டுக்கொள்வாய்,

என் அம்மா ஒரு நாள் எனக்கு என்னெய் வழிய தலை சீவி அனுப்பியிருந்தார் அதை கண்ட நீ இவ்வளவு என்னை தேய்க்காதே என்று சொல்லி உன் தாவனியால் துடைத்து விட்டாய், இதை பார்த்த நம் டியுசன் நன்பர்கள் கிண்டலடிக்க நீயும் மிகவும் வெட்கப்பட்டாய்,

நீ எப்போதுமே வீட்டிலிருந்து தான் மதிய உனவு கொண்டு வருவாய் நான் எப்போதுமே பள்ளி உனவு தான், ஒரு நாள் மதிய உனவுக்காக நான் நீண்ட வரிசையில் நின்றிறுந்தேன் அதைப்பார்த்த நீ உன்னுடைய மதிய உனவை எனக்கும் பகிர்ந்து கொடுத்தாய் மேலும் நாளை முதல் வரிசையில் நிற்க்காதே உனக்கும் சேர்த்து நான் கொண்டு வருகிறேன் என்றாய்,

இப்படியே தினமும் எனக்கும்  சேர்த்து தான் மதிய உனவு கொண்டு வருவாய். ஒரு நாள் உன் பிறந்த நாளென எல்லாருக்கும் சாக்லெட் கொடுத்தாய் எனக்கு மட்டும் சாக்லெட்டுடன் ஒரு புன்னகையும் சேர்த்து கொடுத்தாய் ஆனால் தின்றால் தீர்ந்து விடும் என்பதால் அதை தின்னாமலே நான் பாதுகாத்தது உனக்கு தெறியாது,

இப்படியே பள்ளி, டியூசன் என நம் காலங்கள் கடந்தன நாம் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு தொடங்கியது 10 நாள் தொட்ர் விடுமுறை இந்த 10 நாட்கள் உன்னை பார்க்காமல் இருக்க போகிறேன் இருந்தாலும் படிப்பில் கவனத்தை செலுத்தி வந்தேன் அடுத்து வந்தது பொது தேர்வும்.
ஒவ்வொறு தேர்வின் போதும் உன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பேன் ஆனால் பேச வருவதற்குள் உன் வகுப்பு தோழிகள் வந்து விடுவார்கள்,

இப்படியே ஒவ்வொரு தேர்வின் போதும் பேச முடியாமலே கழிந்தது இதோ இன்று கடைசி தேர்வு இன்று எப்படியாவது பேச வேண்டும் என்று வேகமாக தேர்வெழுதி விட்டு வந்தேன் நீயும் தான். எப்படியெழுதியிருக்கிறாய் என்றாய் நன்றாக எழுதியிருப்பதாக நானும் சொன்னேன்.

நீ என்னை பார்த்து நன்றாக படி நன்றாக படித்து பெரிய ஆளாக வர வெண்டும் மேலும் என்னை மறந்து விடாதே எப்போதும் உன் ஞாபகத்தில் வைத்துக்கொள் என்றாய்,

உன்னை எப்படி மறக்க முடியும் எனக்கு என் வாழ்க்கையை உனர்த்தியவளே நீதான் என் அம்மாவுக்கு அடுத்து என் மேல் பாசம் காட்டியவள் நீதான் எப்படி மறக்க முடியுமென சொல்லத்தோன்றியது ஆனால் சொல்ல முடிய வில்லை அதற்கான காரனம் அப்போது தெறிய வில்லை,

இதோ நேரம் நெறுங்குகிறது என்ன பேசுவது நாளை முதல் உன்னை கான முடியாது இந்த பிரிவை நான் எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் இப்படியே என்னுள் எண்ணங்கள் அலை மோதியது,


இதோ நன்பர்கள் எல்லாம் மை தெளித்து தங்கள் பிரிவை வெளிப்படுத்துகிறார்கள் ஆனால் நம் பிரிவை எப்படி வெளிப்படுத்துவதென தெறியாமல் தடுமாறிக்கொண்டிருந்தோம், உன் தோழிகள் ந்து உன்னை அழைக்க கலங்கிய படியே நி நகர்ந்தாய் நானும் நகர்ந்தேன் அதன் பின்பு உன்னை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க வில்லை இதோ காலங்கள் கடந்து விட்டன ஆனாலும் உனக்கு தர வேண்டிய அந்த காதலை வேறு யாருக்கும் தராமல் பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்றாவது ஒரு நாள் உன்னை நான் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் நானும் என் காதலும்,,,

No comments:

Post a Comment