Wednesday, 10 December 2014

பள்ளிக்காதல்

அது ஒரு அழகான பள்ளிக்காலம் சரியாக மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறோம்.உன் வீடும் என் வீடும் அருகருகில் தான் தினமும் பள்ளிக்கு ஒன்றாக சென்று தான் திரும்புவோம் எப்போதுமே நீ என் வீட்டில் தான் இருப்பாய் ஆம் என் அம்மாவும் ஆசிரியை என்பதால் நீ என் வீட்டிலேயே படிப்பாய்,

நான் பள்ளிக்கு வரும்போது உனக்கும் சேர்த்து தான் பலப்பக்குச்சியை எடுத்து வருவேன் அதனால் சீக்கிரமே பலப்பக்குச்சி தீர்ந்து விடுவதால் நான் தின்று விடுவதாய் என்னி என் அம்மா அடித்த்தெல்லாம் உனக்கு தெறியாது.

ஆரம்ப கல்வி முடித்து 6 ம் வகுப்பு படிப்பதற்கு வேறு பள்ளிக்குத்தான் செல்ல வேண்டும் எப்படியோ தெறிய வில்லை நாம் இருவரும் ஒரே பள்ளியில் தான் சேர்க்கப்பட்டோம்,

சின்னப்பையன்களையெல்லாம் பென்கள் பிரிவில் சேர்ப்பது எங்கள் பள்ளியின் வழக்கம் அதனால் நானும் உன் பிரிவிற்கு மாற்ற்ப்பட்டேன்.

நீ எப்போதுமே வாயாடிப்பென்னாகவே இருப்பாய் ஆனால் நானோ வகுப்பில் இருப்பதே பாதிப்பேருக்கு தெறியாது. 9-ம் வகுப்பு தேர்ந்து 10- ம் வகுப்புக்கு மாறினோம் ஒரு முறை கணக்கு பாட்த்தில் மதிப்பென் குறைவாக எடுத்தமைக்காக அதிக மதிப்பென் எடுத்த உன்னை என் தலையில் கொட்ட சொன்னார் அந்த கணக்கு வாத்தியார் ஆனால் நீயோ தயங்கி தயங்கி மெதுவாய் கொட்டினாய்,

இது போல் வகுப்பில் பல பேரிடம் கொட்டு வாங்கியிருக்கிறேன் ஆனால் நீ கொட்டியது மட்டும் வலிக்கவே இல்லை ஒருவேளை கொட்டியது பென்னின் கரம் என்றும் சொல்ல முடியாது ஆமாம் என்னை கொட்டிஅயவர்களில் பெரும்பாலும் பென்களின் கைகள் தான் அவர்களெல்லாம் என்னை கொட்டும் போது என்றோ நான் செய்த சேட்டைகளை மனதில் வைத்துக்கொண்டு அழுத்திக்கொட்டுவார்கள் ஆனால் நீ மட்டும் எப்படி வலிக்காமல் கொட்டினாய்???

அன்று மாலை வகுப்பு முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்புகையில் நான் கொட்டியது வலித்த்தா?? என்று தலையை தடவினாய் அப்போது நீ தான் கொட்டவே இல்லையே எப்படி வலிக்கும் என்று கேட்க தோன்றியது ஆனால் ஏனோ தெறிய வில்லை இல்லையென்று தலையையாட்டி விட்டு சென்று விட்டேன்.

அப்போது நீ சொன்னாய இனி யாரிடமும் கொட்டு வாங்கக்கூடாதென அதனால் தான் என்னவோ அதன் பின்பு யாரிடமும் கொட்டு வாங்க வில்லை நீ என்னிடம் அடிக்கடி கேட்பாய்  ஏன் சரியாக பேசு மறுக்கிறாய் என்று நானோ பதில் சொல்ல முடியாமல் மௌனமாய் நகர்வேன் ஆனால் நானும் உன்னோடு பேச ஆவாலாய் இருந்தது உனக்கு தெரியாது,

நீ எல்லா போட்டிகளிலும் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்வாய் ஆனால் நானோ அதிலும் சேராமல் ஒதுங்கி நிற்பேன் ஒரு முறை கல்லூரி ஆண்டு விழாவின் போது என்னை ஏதேனும் ஒன்றில் கலந்துகொள்ள சொல்லி வற்புறுத்தினாய் நானும் மறுத்தேன் ஆனால் எனக்கே தெறியாமல் கவிதை போட்டியில் என் பெயரை பதிவு செய்திருந்த்து பின்னர் தான் தெறிந்தது,

அப்போது தான் மலர்ந்த்து என் முதல் கவிதை அது முழுக்க அம்மாவை பற்றிய கவிதை தான் ஆனால் அதற்கு கருவாய் கிடைத்தவள் நீ தான் என்பது உனக்கு தெரியுமா அல்லது தெறியாது என்று இன்றும் எனக்கு தெறியாது,




பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நான் உன்னை விட 15 மதிப்பென்கள் அதிகமாய் பெற்றிருந்தேன் ஆம் நான்  420-ம் நீ 405 மதிப்பென்னும் பெற்றிறுந்தோம் நான் அவ்வளவு மதிப்பென் பெற்றதற்கு என்னை விட நீ தான் அதிகமாய் சந்தோசப்பட்டாய் அதோடு நிறுத்தி விடாமல்  நம் பள்ளி நன்பர்களிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாய் ஆனால் அந்த மதிப்பென்னுக்கு காரனமானவள் நீ மட்டும்தானென்று உனக்கு தெறியாது.

அடுத்து பத்தாம் வகுப்பு முடித்து நான் தொழிற்நுட்ப கல்வியும் நீ மேல் நிலை முதலாம் ஆண்டும் சேர்ந்தோம் அப்போது தான் நமக்குள் ஏற்ப்பட்ட்து அந்த முதல் பிரிவு ஆம் நான் சென்ன்னையில் சேர்க்கப்பட்டேன் நீ அங்கேயே சேர்க்கப்பட்டாய்,

இந்த பிரிவை என்னால் தாங்க முடிய வில்லை அதை உன்னிடம் என்னால் வெளிப்படுத்தவும் தெறிய வில்லை நீ என்னை விட்டு போகப்போகிறாயா? என்று கேட்டாய் அந்த கேள்விக்கும் என்னால் அப்போது பதில் அளிக்க முடிய வில்லை, நான் சென்னைக்கு தயாராகி பேருந்து நிருத்தம் வந்த போது என் வீட்டில் எல்லோறும் வந்தார்கள் நீயும் தான் அப்போது என்னையறியாமல் என் கன் கலங்கியது ஆனால் எல்லோறும் சொன்னார்கள் அம்மாவை பிரிவதால் தான் இந்த அழுகை என்று,

உனக்கும் எனக்குமான இடைவெளி அதிகரித்தது நீ உன் கல்வியை ஊரிலேயே தொடர்ந்தாய் நானோ தவிர்க்க முடியாத காரனங்களால் சென்னையிலே தொடர்ந்தேன் ஆம் இப்போது நீ இள நிலை பல் மறுத்துவம் படிப்பதாய் என் சகோதரி சொன்னால் நான் முது நிலை பொறியியல் இருதி ஆண்டு படித்து வந்தேன் இருதி தேர்வு முடித்து விட்டு ஊருக்கு முதன் முறையாய் வந்தேன் உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வந்தேன் இப்போது எனக்கென்று ஒரு தகுதி இருக்கிறது இப்போது என் காதலை உன்னிடல் சொன்னால் நீயோ அல்லது உன் தந்தையோ என் காதலை மறுக்க முடியாது என்ற நம்பிக்கையில் வந்தேன்.
வரும் வழியில் தெருவில் உன்னை சந்தித்தேன் மிக்க சந்தோசத்தோடு உன்னருகில் வந்தேன் நீயொ ஒரு சிரிய புன்னகையோடு எப்படுயிருக்கீங்க? உங்க அம்மா ரெண்டு நாளா சொல்லிக்கிட்டே இருந்தாங்க முதலில் அவங்களை போய் பாருங்க என்றாய்?

என் மனதில் இடி இறங்கியதாய் ஒரு வலி ஆம் நீ என்னை முதன் முறையாய் ங்க என்று அழைத்த்து இது தான் முதன் முறை பின்னர் என் வீட்டுக்கு சென்றேன் என் அம்மா ஏண்டா முகம் ரொம்ப வாடிப்போயிருக்கிறது எனும் போது இல்லையம்மா நீண்ட இடைவெளிக்கு பின் பார்ப்பதால் உங்களுக்கு அப்படி தெறிகிறது என்று செல்லி சமாலித்தேன் அன்று இரவு சாப்பிடும் போது என் அம்மா சொன்னார் தம்பி அர்ச்சனாவுக்கு அடுத்த மாசம் கல்யானம்..டா பையனும் இஞ்ஜினியருக்கு படிச்சிருக்கானாம் என்று சொன்னார்.

அடுத்த நாள் காலை நீ உன் திருமன அழைப்போடு வந்திருந்தாய் என் அம்மா உன்னை அமர வைத்து பேசிக்கொண்டிருந்தார் அப்போது அம்மா தம்பி சரியாகவே சாப்பிட மாட்டெங்கிறாமா என்னென்னே தெறியல என்றார் அதற்கு நீ அவங்களுக்கு சீக்கிரம் ஒரு கல்யானம் பன்னி வச்சிருங்க என்றாய்.

 நீ அவங்க என்று சொல்லும் வார்த்தை என்னும் மிகவும் பாதித்தது என் அம்மா எதேனும் சமைக்கிறேன் இரு என்று சொல்லி விட்டு சமையலறைக்கு சென்றார் அப்போது நீங்கள் நிச்சயம் வரவேண்டும் என்று அழ்ப்பிதழை அளித்தாய் அப்போது என்னையறியாமலே என் கலங்கியது அதை கட்டுபடுத்திக்கொண்ட நான் உன்னை பார்த்தேன் உன் கன்னிலிருந்து சில கன்னீர்த்துளிகள் அந்த அழைப்பிதழை நனைத்திருந்த்து அப்போது தான் என் முட்டாள் தனம் எனக்கு தெறிந்தது ஒரு வாயாடி பென்னை எவ்வளவு பெரிய ஊமையாக்கியிருக்கிறேன் என்று,


அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் ஏதேதோ கரனங்கள் சொல்லி சென்னைக்கு வந்து விட்டேன் அதன் பின்னர் எந்தவொரு பென்னின் மீது எனக்கு எந்த வித எண்ணங்களும் தோன்ற வில்லை இதோ 5 ஆண்டுகள் கடந்து விட்ட்து உனக்கு ஒரு அழகான குடும்பம் அன்பான கணவன் அம்மா என்று அழைக்க 2 குழந்தைகள் ஆனால் ஏண்டா கல்யானம் வேண்டாங்கிர என கேட்கும் என் அம்மாவுக்கு மட்டும் ஒரு நல்ல மகனாய் பதில் சொல்ல முடிய வில்லை என்னால்!!!!!!!

No comments:

Post a Comment