Wednesday, 10 December 2014

என் தங்கையின் தோழி

நீ ஒரு சிகப்பு நிற சைக்கிளில் வருவாய் என் வீட்டிற்கு ஆம் நீ என் தங்கையின் வகுப்புத்தோழி நீ 11-ம் வகுப்பு நான் 12 வகுப்பு இருவரும் ஒரே பள்ளியில் தான் படிக்கிறோம்.நீ  தினமும் என் வீட்டிற்கு வருவாய் நீயும் என் தங்கையும் ஒன்றாகவே பள்ளிக்கு செல்வீர்கல் ஆனால் ஒரு முறை கூட நான் உன்னிடம் பேசியதில்லை,

அவ்வப்போது உன்னை விலையாட்டு மைதானம் குடி நீர் தொட்டி என பல இடங்களில் எதிர்பாராமல் நம் சந்திப்பு நிகழும் ஆனால் ஒரு போதும் பேசியதில்லை நீ மட்டும் ஓரக்கன்னால் ஒரு பார்வை பார்த்து விட்டு போவாய் அதனால் என் சக தோழர்கள் உன்னையும் என்னையும் கிண்டலடிப்பது உனக்கும் தெறியும்,

நான் 12 - ம் வகுப்பு முடிந்து  கல்லூரிக்கு சென்றேண் நீயோ 12 - ம் வகுப்பு. தினமும் உன்னை பார்ப்பேன் ஒரு சிறிய புன்னகையை அள்ளி வீசுவாய் அத்தோடு கல்லூரிக்கு செல்வேன் கணவுகளோடு வருவேன் கவிதைகளை எழுதுவேன் இப்படியே என் நாட்கள் நகர்ந்த்து.

ஒரு நாள் ஆன்ந்த விகடனில் வந்த என் கவிதையை உன்னிடம் கான்பித்தாள் என் தங்கை படித்த நீ நன்றாக இருக்கிறது என் வாழ்த்துக்கள் என்றாய் அது தான் என்னிடம் நீ பேசிய முதல் வார்த்தை அதோடு அந்த புத்தகத்தையும் நீ எடுத்து சென்று விட்டாய்

நீ என் வீட்டிற்கு வரும்போதெல்லாம் உன் பார்வையால் தேடுவாய் நான் பார்த்ததும் தலை குனிவாய் உன் முக்கு கன்னாடிக்கு இடையில் நீ பார்க்கும் அந்த குறும்பு பார்வை இன்னும் என் மனதிற்குள் அழகாய் பயனிக்கிறது,


ஒரு முறை உன் பிறந்தநாளுக்கு நீ சாக்லெட் தந்தாய் உனக்கு பிறந்த நாள் பரிசாக என்ன வேண்டும் என்றேன், நீயோ நான் கேட்பதை உங்களால் தர முடியாது என்றாய். நான் நிச்சயம் தருகிறேன் கேள் என்றேன் நீயோ நேரம் வரும்போது கேட்க்கிறேன் இப்போது எனக்காக ஒரு கவிதை மட்டும் எழுதி தாருங்கள் என்றாய்,

நானும் எழுதிக்கொடுத்தேன் இதோ

அன்பு எனும் தலைப்பில்
சிறிய கவிதை –
கேட்டார்கள்
அம்மா என்றேன்.
கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும்
சுறுங்க சொல்லியிருப்பேன்
நீ என்று,,

இப்படி எழுதி கொடுத்துவிட்டு தயவு செய்து இங்கு படிக்க வேண்டாம் உங்கள் வீட்டில் போய் படித்து பாருங்கள் என்றேன்,

அடுத்த நாள் வந்தாய் நானோ உன் கன்னில் படாமல் பயந்து பயந்து இருந்தேன், என்னை பார்த்த நீ உங்கள் கவிதை மிகவும் அழகாக இருந்த்து என்றாய் நானும் நன்றி என்றேன் நீயோ உன்மையை சொல்லுங்கள் இந்த கவிதையை எனக்காகவா எழுதினீர்கள் என்றாய், நானோ இல்லை உனக்காக மட்டும் தான் எழுதினேன் என்றேன் நீ சற்றும் யோசிக்காமல் நான் உங்களை காதலிக்கிறேன் என்று சொல்லி விட்டு ஓடி விட்டாய்!

எனக்கு என்ன செய்வது என்று தெறியவில்லை நான் என்ன நினைத்தேனோ அதை நீயே சொல்லி விட்டாய்.
இப்படியே காலங்கள் கடந்தன ஒரு நாள் நம் காதல் உன் தந்தைக்கு தெறிய வர என்னையழைத்தார் என் மகளை மிகவும் வசதியாக வளர்த்து விட்டேன் அந்த வசதியை உன்னால் தர முடியாது எனவே நீ அவளை மறந்து விடு என்றார் நீயோ எனக்கு வசதியெல்லாம் வேண்டாம் அவர் மட்டும் தான் வேண்டுமென்று என்னை கைக்காட்டினாய்.

என் மகளுக்கு அந்தவசதியை உன்னால் எப்போது தர முடியுமோ அப்போது வா என் மகளை உனக்கு மனமுடித்து தருகிறேன் என்றார் உன் தந்தை.

கோபம் தலைகேறியவனாய் என் பொறியியல் கல்வியை முடித்து ஒரு தனியார் தொழ்ற்ச்சாலைக்கு பனிக்கு சென்றேன் கடுமையாய் உழைத்தேன் அதனால் பதவி உயர்வும் பெற்றேன் இதோ மூன்றாண்டுகள் கழிந்து விட்டது இந்த மூன்றாண்டுகளில் உன்னை சந்திக்க நான் முயற்சிக்க வில்லை இதோ எனக்கு உன்னை செய்யுமளவிற்கு எனக்கு எல்லா தகுதியிருக்கிறது.

உன் தந்தையிடம் உரிமையோடு  பெண் கேட்க ஆவலோடு வந்தேன் ஆம் வந்த எனக்கு பேரதிர்ச்சி தான் கிடைத்தது ஆம் வழியில் கைக்குழந்தையுடன் நீ நின்றிருந்தாய். எனக்கு உன் தந்தை மீது இருந்த கோபத்தை விட உன் மீது தான் அதிகமாய் கோபம் ஏற்ப்பட்டது,

என்னை காத்திருக்க வைத்த காதல் உன்னையும் காத்திருக்க வைத்திருக்க வேண்டும். எப்படி உன்னால் வேறு ஒருவனை திருமனம் செய்ய முடிந்தது என இப்பட் பல வளிகள் வேதனைகள்,

அதற்கு மேலும் அந்த ஊரில் இருக்கு முடியாமல் மீண்டும் சென்னை திரும்பினேன், நீ என்றும் நலமாய் வாழ வேண்டுமென மனம் விரும்பினாலும் உன் மீதான கோபம் மட்டும் என்னுள் குறைய வில்லை, ஆம் அந்த அளவுக்கு உன்னை நேசித்தேன்.

அதன் பின்னர் நான் யாரின் தொடர்பும் இல்லாமல் தனிமையை தான் நேசித்தேன் சுவாசித்தேன்.


தவிர்க்க முடியாது ஒரு சூழலில் என் நன்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்த்து. உன்னை வற்புறுத்தி இந்த திருமனத்திற்கு சம்மதிக்க வைத்த்தாகவும் அதை மறுத்து நீ தற்கொளைக்கு முயற்ச்சி செய்த்தையும் அதன் பின்பு தான் என் நன்பர்கள் சொன்னார்கள். ஒன்றாய் சேர்வது மட்டும் காதல் அல்ல அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி பார்ப்பதும் உன்மையான காதல் தான்,.,
ஆம் பென்னே!
காதலுக்கு
என்றுமே தோல்வியல்ல.
சிலர் காதலித்தவர்களோடு
வாழ்கிறார்கள்.
ஆனால்
பலர் காதலோடு
வாழ்கிறார்கள்.
நானும்
உன் அழகான காதலோடு

வாழ்ந்து விட்டுப்போகிறேன்!!!!

No comments:

Post a Comment